search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்பத்திரிக்குள் புகுந்த மழைநீர்"

    • தொடர்மழை காரணமாக, கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கும் பகுதியில் மழைநீர் புகுந்தது
    • மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி கால்நடைகளுக்கு எளிதாக சிகிச்சை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த, ஆத்தூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கும் பகுதியில் மழைநீர் புகுந்தது.

    கடந்த ஒரு வாரமாக குளம்போல் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் கூடாரமாக மாறியுள்ளது. இதனால், கால்நடைகளுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் நோய்க்காக ஆஸ்பத்திரிக்கு வரும் கால்நடைகள் நோய் தொற்றோடு செல்லும் அவல நிலை உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வேதனை தெரிவித்துள்ளார்.

    எனவே, ஆத்தூர் அரசு கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி கால்நடைகளுக்கு எளிதாக சிகிச்சை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    ×