search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலிய பாராளுமன்றம்"

    • பணி நேரம் முடிந்ததும் ஊழியர்கள் செல்போனை அணைத்து வைக்கலாம்
    • மின்னஞ்சலை பார்க்கும்படி இனி ஊழியர்களை நிறுவனங்கள் கட்டாயப்படுத்த முடியாது

    ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் செனட் (Senate) மற்றும் பிரதிநிதிகளின் சபை (House of Representatives) என இரு அவைகள் உள்ளன.

    செனட் சபை, அந்நாட்டு ஊழியர்களின் நலன் கருதி "ரைட் டு டிஸ்கனெக்ட்" (Right to Disconnect) எனும் "தொடர்பு அறுக்கும் உரிமை" குறித்து சட்டம் இயற்றியது.

    இச்சட்டத்தின்படி, ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், தங்கள் பணி நேரத்தை முடித்த ஊழியர்களை, நிறுவன அதிகாரிகள் செய்தி, மின்னஞ்சல் மற்றும் செல்போன் அல்லது வேறு எந்த வகையிலும் தொடர்பு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    அதே போன்று, பணிக்கான நேரம் முடிந்ததும் ஊழியர்கள் தங்கள் செல்போன்களை அணைத்து வைத்து கொள்வதும் அவர்களின் உரிமை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) இந்த சட்டத்திற்கு பெரும் ஆதரவு வழங்கியுள்ளார்.


    இச்சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அந்தோனி அல்பானீஸ், "24 மணி நேர பணிக்காக ஊதியம் வாங்காத ஒருவர் பணி நேரம் முடிந்தும் தொடர்பில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என கூறினார்.

    மென்பொருள், தகவல் தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் பணிக்கான நேரம் முடிந்து ஊழியர்கள் சென்ற பிறகும், தங்கள் மின்னஞ்சலை அவ்வப்போது பார்த்து அலுவல் குறித்த முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

    தாங்கள் தேவையற்று அழைக்கப்படுவதாக பணியாளர்கள் உணர்ந்தால் நிறுவன மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும். அதில் தீர்வு காணப்படவில்லை என்றால், பணியாளர் நல ஆணையத்திடம் முறையிடலாம்.

    இச்சட்டத்திற்கு புறம்பாக ஊழியர்களை அழைக்கும் நிறுவனங்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்துக்களின் புனித "ஸ்ரீபகவத் கீதை" நூலின் மீது பிரமாணம் செய்து கொண்டார்
    • வருண் கோஷின் பெற்றோர், நரம்பியல் துறையில் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    ஆஸ்திரேலிய பாராளுமன்றம், செனட், பிரதிநிதிகள் சபை என இரு சபைகளும், "அரசர்" எனும் அந்தஸ்தில் கவர்னர்-ஜெனரல் ஒருவரையும் கொண்டது.

    செனட் பதவிக்கு, மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாரிஸ்டர் பட்டம் படித்த, இந்திய வம்சாவளியினரான வருண் கோஷ் (Varun Gosh) என்பவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர்.

    இந்நிலையில், தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்துக்களின் புனித "ஸ்ரீபகவத் கீதை" (Sri Bhagavad Gita) மீது பிரமாணம் செய்து பதவியேற்று கொண்டார்.

    ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இவ்வாறு நடைபெறுவது இதுவே முதல்முறை.

    ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese), வருண் கோஷ் பதவியேற்றது குறித்து எக்ஸ் கணக்கில் மகிழ்ச்சியுடன் தனது பாராட்டுகளை தெரிவித்து அவரை வரவேற்றுள்ளார்.

    1985ல் ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பெர்ரா (Canberra) நகரில் பிறந்தவர் வருண் கோஷ்.

    மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்ட இவரது பெற்றோர், நரம்பியல் துறை மருத்துவர்கள். வருண், கலை மற்றும் சட்டப்படிப்பில் மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அத்துடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் சட்டம் பயின்றவர்.

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், உலக வங்கியில் (World Bank) ஆலோசகராகவும் பணி புரிந்தார்; நியூயார்க் நகரில் நிதித்துறை சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார்.

    தனது 17-வது வயதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் லேபர் கட்சியில் சேர்ந்தது முதல் இவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது.

    தனது பதவி குறித்து பேசும் போது, "மிக உயர்ந்த கல்வி கற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உயர்தர கல்வியும், பயிற்சியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என வருண் கோஷ் தெரிவித்தார்.

    • பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்றம் அருகே ரஷிய தூதரகம் கட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • தூதரகம் கட்டுவதற்கான நிலம் ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கான்பெர்ரா:

    ஆஸ்திரேலிய பாராளுமன்றம் அருகே ரஷியா தனது புதிய தூதரக கட்டிடத்தை கட்ட முடிவு செய்தது. இதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறியதாவது:-

    பாராளுமன்றத்திற்கு மிக அருகில் ஒரு புதிய ரஷிய தூதரகம் கட்ட முயற்சிப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்து அரசு மிகத் தெளிவான பாதுகாப்பு ஆலோசனையை பெற்றுள்ளது.

    குத்தகைக்கு விடப்பட்ட இடம், தூதரகம் அமையும் இடமாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் விரைவாக செயல்படுகிறோம். பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகே ரஷியா புதிய தூதரகத்தை கட்டுவதை தடுக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    பாராளுமன்றத்தில் முன் வைக்கப்படும் சட்டம், பாதுகாப்பு ஏஜென்சிகளின் ஆலோசனையின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தின் மீதான ரஷியாவின் குத்தகையை நிறுத்தும்.

    எதிர்க்கட்சிகள் மற்றும் பிற எம்.பி.க்களுக்கு இச்சட்டம் குறித்து நேற்று இரவு விளக்கமளிக்கப்பட்டது. இன்று பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் மூலம் சட்டத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்டன. இந்த முடிவு ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக எடுக்கப்பட்டதாகும். இதற்கு ஒத்துழைத்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

    பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்றம் அருகே ரஷிய தூதரகம் கட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. தூதரகம் கட்டுவதற்கான நிலம் ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ×