search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.பி.உதயகுமார் பேச்சு"

    • அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேட்டில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • அமைச்சரவை மாற்றத்தால் தி.மு.க.வின் பேஸ்மட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது என்று பேசினார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேட்டில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆகியோரது பிறந்தநாள் விழாவை திராவிட இயக்க எழுச்சி நாளாகவும், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இளைஞர்கள் எழுச்சி பெருவிழாவாகவும் நடத்தி வருகிறோம்.

    அதனைத்தொடர்ந்து இன்றைக்கு 1½ கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 8 கோடி மக்களை பாதுகாத்து வரும் எடப்பாடியாரின் பிறந்தநாள் விழாவை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, வறுமை ஒழிப்பு தினமாகவும், இளைஞர் எழுச்சி திரு விழாவாகவும், ஜெயலலிதா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. சோதனை யான காலத்தில் அதனை வென்றெடுத்து சாதனைதான் படைத்துள்ளது. தற்போது தி.மு.க.வின் பேஸ்மட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. அதை சரி செய்ய அமைச்சரவை மாற்றத்தை முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ளார்.

    நாட்டின் நிதி அமைச்சர் இன்றைக்கு முதல்- அமைச்சரின் வீட்டு நிதியை கையாளும் ரகசியத்தை கூறியுள்ளார். இதற்கு உரிய பதிலை சொல்ல வேண்டும். அமைச்சரவை மாற்றம் என்பது கண்துடைப்பு நாடகமாகும்.

    அதி.மு.க.வை அழிக்க பல்வேறு சூழ்ச்சிகளை ஸ்டாலின் செய்து பி.டீம், சி.டீம் என்பதை இயக்கினார். அந்த டீம் எல்லாம் அதி.மு.க.வின் துரோகத்தின் டீமாக உள்ளது.

    அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்களில் தொன்று தொட்டு ஜல்லிக்கட்டு போட்டி வாடிவாசலில்தான் நடைபெற்று வரும். ஜல்லிக் கட்டு விழாவிற்கு வாடி வாசல் மூடப்படுமா? என்று மக்கள் இன்றைக்கு அச்ச மடைந்துள்ளனர்.

    அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டிற்கு மைதானத்தைக் கட்ட யாரும் கோரிக்கை வைக்கவில்லை. பாரம்பரியமாக வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தாமல், மூடுவிழா கண்டால் மக்களி டம் இருந்து கடும் கொந்த ளிப்பை தி.மு.க. சந்திக்க வேண்டியது வரும். இன்றைக்கு கலைஞர் நூலகம், கலைஞருக்கு பேனா அமைக்க பணம் இருக்கிறது. ஆனால் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயக்க பணம் இல்லை என்று கூறு கிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.22 கோடி வரை சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.சரவணன், கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
    • தி.மு.க. மன்னராட்சி போல அரசை நடத்துகிறது என்று ஆர்ப்பாட்டத்தில் முன்ளாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி, கல்லுப்பட்டி, திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி எப்போது வந்தாலும் மக்கள் நலனில் அக்கறை செலுத்த மாட்டார்கள். குறிப்பாக இந்த 18 மாத ஆட்சியில் பொது நலன்கள், மக்கள் திட்டங்களை மறந்து விட்டது. குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம் ஆகியவற்றை மூடுவிழா கண்டுவிட்டது போல் அம்மா உணவகத்தையும் மூடு விழா செய்ய முயற்சிக்கிறது.

    குறிப்பாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியை புறக்கணித்து வருகின்றனர். ஏதாவது திட்டம் குறித்து கேட்டால் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். இந்த தி.மு.க. ஆட்சியில் நிதியும் இல்லை, நீதியும் இல்லை, சத்தியம் இல்லை, நேர்மையும் இல்லை.

    கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்காக திட்டங்களை பாரபட்சம் இன்றி வழங்கினோம். இன்றைக்கு கல்லூரி, பள்ளிகளில் அருகே போதை பொருட்கள் புழக்கத்தில் இருப்பது வேதனையான விஷயமாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மதுவினால் விதவைகள் அதிகரித்து உள்ளனர்.

    மக்கள் நலன் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்த மேடை அமைத்தால், அதனை பிரிப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது. நீங்கள் இங்கு மேடையை பிரித்து விடலாம். ஆனால் எங்களையும் மக்களையும் பிரிக்க முடியாது.

    கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி இப்படி மன்னராட்சி தமிழகத்தில் மலர செய்துள்ளார் ஸ்டாலின். ஆனால் அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டர் எடப்பாடிபழனிசாமி முதலமைச்சராக முடியும் என்ற வரலாற்றை நாங்கள் உருவாக்கி உள்ளோம்.

    நாங்கள் ஜனநாயக ஆட்சி மலர பாடுபட்டு வருகிறோம். ஆனால் இன்றைக்கு மன்னராட்சியை ஒழித்தும் கூட புறவழியில் மன்னர் ஆட்சியை தமிழகத்தில் தி.மு.க. நடத்தி வருகிறது. இதற்காகவா மக்கள் வாக்களித்தார்கள்?

    மீண்டும் ஜனநாயகத்தை நாங்கள் மலரச் செய்வோம் அ.தி.மு.க.வை தி.மு.க. சூழ்ச்சி செய்து, சிதைத்து, கலைக்க, உடைக்க நினைத்தாலும் முடியாது. இந்த இயக்கம் வீழ்வது போல் தெரியும் ஆனால் விஸ்வரூபம் எடுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர தயாரா? என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
    • 120 ஜோடி ஏழை, எளிய மக்களை தேர்வு செய்து திருமணத்தை நடத்தியதாக கூறினார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அரசின் நிர்வாக குளறுபடிகளையும், மதுரையில் தி.மு.க. அமைச்சர் நடத்திய ஆடம்பர திருமணத்தைப் பற்றி எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஆனால் அதற்கு அமைச்சர் மூர்த்தி அரசியல் நாகரீகம் இல்லாமல் தரம் தாழ்ந்தி பேசுவது அவர் பதவிக்கு அழகு அல்ல, நாலாம் தர மனிதரைப்போல அமைச்சர் பேசி உள்ளார்.

    சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு, பேசுவதற்கு தார்மீக கடமை உண்டு, நீங்கள் நடத்திய ஆடம்பர திருமணத்தை நாட்டு மக்கள் நன்றாக தெரியும், உலை வாயை மூடலாம், ஆனால் ஊர் வாயை மூட முடியாது.நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டீர்கள் 3 கோடி என்று.

    பற்றாக்குறை

    மக்களுக்கு திட்டங்கள் என்றால் நிதிநிலை பற்றாக்குறை என்கிறீர்கள். அம்மா உணவகத்திற்கு நிதி பற்றாக்குறை கூறப்படு கிறது, மடிக்கணினி, தாலிக்கு தங்கம் திட்டம் கேட்டால் நிதி பற்றாகுறை என்று கூறப்படுகிறது, ஆனால் தற்போது ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது, மதுரையில் எந்த அமைச்சர் குடும்பத்திலும் இதுபோன்ற ஆடம்பரத்தில் திருமணம் நடக்கவில்லை, இதில் எடப்பாடியார் பேசுவதில் எந்த தவறும் இல்லை.

    அமைச்சர் மூர்த்தி பழையதை நினைத்துப் பார்க்க வேண்டும், அமைச்சர் மூர்த்தி பதவி மோகத்தில் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அப்படி முன்னாள் முதல்வர் கூறியது தவறு என்றால் நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடலாமே, உங்களுக்கே தயக்கம் ஏன்? ஆனால் நாலாம் தர மனிதரைப் போல் அமைச்சர் பேசக்கூடாது, நாங்கள் எதற்கும் பின்வாங்க போகவில்லை,

    ஆடம்பர திருமணம் என்பது ஊரே அறிந்த விஷயம். எதிர்க்கட்சி தலைவருக்கு யாரும் எழுதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, குறிப்பு இல்லாமல் 5 மணி நேரம் கூட பேசுவார். அமைச்சர் மூர்த்தி கனிம வளத்தை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன சேவை ஆற்றினீர்கள் என்பது எங்களுக்கு தெரியும், ஒருஅமைச்சராக இருந்து கொண்டு, மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்த திருமணம் நடந்தை பற்றி நியாயம் கேட்க எதிர்கட்சி தலைவருக்கு தார்மீக உரிமை உண்டு,

    அஞ்சமாட்டோம்

    அரசியல் நாகரீகம் கருதி இதுபோன்ற, அநாகரிகமான முறையில் பேசுவதை அமைச்சர் மூர்த்தி நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் பேசினால் உங்களை பற்றி வெட்ட வெளியில் பேச தயங்க மாட்டோம். அதற்காக நீங்கள் பழி வாங்கும் நடவடிக்கையை கையில் எடுத்தாலும் அதற்கு அஞ்ச மாட்டோம்.

    மதுரையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 120 ஜோடி ஏழை,எளிய மக்களை தேர்வு செய்து திருமணத்தை நடத்தினோம், ஆனால் நீங்கள் முதல்-அமைச்சரை அழைத்து உங்கள் வீட்டு திருமணத்தை நடத்தி உள்ளீர்கள்.

    ஜல்லிக்கட்டு விழாவிற்கு சாப்பாடு போட்டோம் என்று கூறுகிறீர்கள், இதே கொரோனா காலத்தில் முகம் தெரியாத நபர்களுக்கு நாங்கள் உணவு வழங்கினோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×