search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆராய்ச்சிமையம்"

    • 4 முறை நடைபெற்று வந்த சூழ்நிலையில் தற்போது 6 முறை நடைபெற்று வருகிறது.
    • ரூ.6 கோடி மதிப்பில் 2 பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளது

    நாகர்கோவில், மே.2-

    குமரி மாவட்டம் அருவிக் கரை ஊராட்சிக்குட்பட்ட தச்சூர் தெங்காம்பாறை பகுதியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    பொதுமக்களின் பல் வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சர் மனோ தங்கராஜ் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு பொதுமக்க ளின் அனைத்து அடிப்படை தேவைகளையும் அறிந்து கொண்டு, அவற்றினை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் அரசாக திகழ்ந்து வருகிறது.

    ஒவ்வொரு வருடமும் சிறப்பு கிராம சபை கூட்டமானது, 4 முறை நடைபெற்று வந்த சூழ்நிலையில் தற்போது 6 முறை நடைபெற்று வருகிறது.

    இந்தக் கூட்டத்தின் வாயிலாக, கிராமப்புற மக்கள் தங்கள் தேவைகள் குறித்து, கோரிக்கை வைப்பதன் மூலமாக அவர்களுடைய கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண ஏதுவாக அமைகிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் 100 சதவீதம் குடிநீர், பேருந்து வசதி, சாலை வசதி, புதிய கட்டிடங்கள் கட்டுவது உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இதுபோன்ற சிறப்பு கிராமசபை கூட்டம் வாயிலாக நிவர்த்தி செய்யப்படுகிறது

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப் படுத்தி, செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு அனுமதி வழங்கியதன் அடிப்படை யில், விரைவில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் வகையில் ரூ.12 கோடி மதிப்பில் திற்பரப்பு, முட்டம் உள்ளிட்ட 4 பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாடு பணிகள் மேந் கொள்ளப்பட வுள்ளது.

    மாத்தூர் தொட்டில் பாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் ரூ.6 கோடி மதிப்பில் 2 பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் விரை வில் தொடங்கப்பட உள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மகளிர் திட்ட இயக்குநர் இலக்குவன், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், அருவிக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சலேட் கிளிட்டஸ் மேரி, 5-வது வார்டு உறுப்பினர் ஜாண் கிறிஸ்டோபர் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×