search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்"

    • தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒட்டன்சத்திரம் வட்டாரக்கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பென்சன் திட்டம் மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரத்தில் பழைய பென்சன் திட்டம் மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒட்டன்சத்திரம் வட்டாரக்கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்ட த்திற்கு வட்டார தலைவர் ஆரோக்கிய ஞானசேகர் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் காளி மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் லாசர் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை யாற்றினர்.

    வட்டார பொருளாளர் ஜெய்நேச சாந்தினி நன்றி கூறினார்.

    ×