search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுள் அதிகரிக்க"

    • அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.
    • குங்குமத்தை நெற்றியில் இடும் போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது.

    வீட்டில் தினமும் சாமி கும்பிட்டு முடித்ததும் குங்குமத்தை பெண்கள் நெற்றியிலும், தலை வகிட்டிலும் அணிந்து கொள்ள வேண்டும்.

    நெற்றியில் புருவ மத்தியில் பொட்டு வைப்பதில் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை.

    நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது.

    நெற்றியின் புருவ மத்திக்கு நேர் பின்னால் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது.

    இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.

    யோகப் பயிற்சியில் கழுமுனை எனப்படுவதும் இப்பகுதியாகும்.

    தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும்.

    யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும்.

    ஞானக்கண் என்றும் அழைக்கப்படும்.

    அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.

    குங்குமத்தை நெற்றியில் இடும் போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது.

    இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.

    நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஷ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும்.

    ஹிப்னாட்டிசம் முதலிய மனோவசியங்கள் புருவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.

    சுமங்கலிப் பெண்களின் தலை வகிட்டில் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள்.

    அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

    சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

    குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.

    பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

    அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும்.

    தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

    திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

    ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

    கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

    குரு விரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

    சனிவிரலால் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்க்காயுளைக் கொடுக்கும்.

    குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுப்பாட்டிற்கு நல்லது.

    ×