search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kungumam"

    மாங்கல்யம், பெண்களின் நெற்றி, தலை வகிட்டு பகுதிகளில் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால், லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும்.
    படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் இவைகளின் கூட்டே குங்குமம் ஆகும். இவை தவிர கலர்பொடிகள் எதுவும் கலங்காத குங்குமத்தை ‘ஹரித்ரா குங்குமம்’ என்று சொல்வார்கள். குங்குமத்தில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இருப்பு சத்தாக மாற்றம் காண்கிறது. படிகாரம் கிருமிநாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குகிறது. தொற்றுநோய்களும் அண்டாது. மூளைக்கு செல்லும் நரம்புகள், அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி ெநற்றியாகும். குங்குமம் அணிவதால், நெற்றியில் சூடு தணிகிறது.

    பெண்களின் தலை வகிட்டின் நுனியை, ‘சீமந்தபிரதேசம்’ என்பார்கள். பெண்கள் அணியும் மாங்கல்யம், பெண்களின் நெற்றி, தலை வகிட்டு பகுதி ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால், லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும். மேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும்.

    நாம் செய்யும் சேமிப்பு எந்த நிலையிலும் கரையாது. வீட்டிற்கு வரும் சுமங்கலி களுக்கு குங்குமம் கொடுப்பதால், கொடுப்பவர்- பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலத்தைப் பெருக்கும். பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக, தாங்கள் இட்டுக் கொண்டபிறகே கொடுக்க வேண்டும். ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் உள்ள இடத்தில், குங்குமத்தை அணிவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.



    மகாலட்சுமி 108 இடங்களில் வாசம் செய்கிறார். அவை:- வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரிச்சங்கு, மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம், கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக்சுருவம், கமண்டலநீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை, கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங்கிழங்கு, ஆலவிழுது, தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை, திரு நீற்றுபச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல், விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு, நெற் கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை, கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, குளவிக்கூட்டு மண், நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானைகொம்பு மண், ஆலஅடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை, கண்ணாடி, மோதிரம் (தந்தம்), பட்டு, தையல்இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், கீரிப்பிள்ளை, நுனிமுடிந்த கூந்தல், படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, கெண்ட, வாசல் நிலை நெற்றி போன்ற இடங் களிலும் லட்சுமி வாசம் செய்கி றாள். ஆனாலும் ஆணவம் அகற்றி, குருவின் திருவடி பணிந் தவர்களுக்கே அவள் அருள் புரிகின்றாள்.

    எனினும் ஆணவம் அகற்றி, குருவின் திருவடிகளை சரண டைந்தவர்களுக்கே நிரந்தரமாக அருள்புரிகின்றாள். 
    ×