search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுர்வேத வைத்தியம்"

    • உச்சந்தலையில் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படலாம்.
    • ஆயுர்வேத வைத்தியம் மூலம் பொடுகை நீக்கலாம்.

    குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவதால் உச்சந்தலையில் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படலாம், இந்த தொந்தரவால் பொடுகு ஏற்படும். பொடுகு தொல்லையால் முடி கொட்டி விடும். எனவே ஆயுர்வேத வைத்தியம் மூலம் எப்படி பொடுகை நீக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

    சூடான எண்ணெய் மசாஜ்

    தேயிலை மரம் அல்லது வேம்பு போன்ற அத்தியாவசிய எண்ணெய்களின் சில துளிகளுடன் சூடான தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் அல்லது இரண்டையும் கலந்து மசாஜ் செய்யலாம். இது ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.

     வேம்பு மற்றும் நெல்லிக்காய் ஹேர் பேக்

    வேம்பு மற்றும் நெல்லிக்காய் பொடுகை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக அமைகின்றன. தூள் செய்யப்பட்ட வேம்பு மற்றும் நெல்லிக்காயை பயன்படுத்தி ஒரு பேஸ்ட்டை உருவாக்கவும். அதை தண்ணீர் அல்லது கற்றாழை ஜெல்லுடன் கலக்கவும். அதை உச்சந்தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவ வேண்டும்.

    வெந்தயம்

    வெந்தய விதைகள் ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம். வெந்தய விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, பேஸ்டாக அரைத்து, உங்கள் தலையில் தடவி சிறிதுநேரம் கழித்து குளிக்க வேண்டும்.

     கற்றாழை

    கற்றாழை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட இயற்கையான மருந்தாகும். கற்றாழை ஜெல்லை தலைமுடியின் வேர்கால்கள் வரை தடவி, 20-30 நிமிடங்கள் கழித்து தலையை அலச வேண்டும். இதன் குளிர்ச்சி மற்றும் ஈரப்பதமூட்டும் விளைவுகள் உச்சந்தலையில் உள்ள பொடுகை நீக்கும்.

    ×