என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆயுர்வேத மருத்துவம்"
- பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
- கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் இன்று காலை பேரணி தொடங்கியது.
கன்னியாகுமரி :
8-வது தேசிய ஆயுர்வேத தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் இன்று காலை பேரணி தொடங்கியது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் பேரணியை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் வழியாக களியக்காவிளையை சென்றடைகிறது
- சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
- பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
சர்வதேச ஆயுர்வேத மருத்துவ மாநாட்டின் தொடக்க விழா கன்னி யாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர அவைக்கூடத்தில் நடந்தது. கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சர்வதேச ஆயுர்வேத மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆயுர்வேத மருத்துவம் இந்திய மருத்துவத்திலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த மருத்துவம் ஆகும். உலக அளவில் ஆயுர்வேத மருத்துவத்திற்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது. ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக ஆயுர்வேத மருத்துவமும் திகழ்கிறது.
பள்ளிகளிலும் ஆயுர்வேத மருத்துவம் பற்றி தனி பாடத்திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அப்போது தான்ஆயுர்வேத மருத்துவத்துக்குஅதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆயுர்வேத மருத்துவ பாடத்தை படிப்பதற்கும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சுரேஷ் உன்னிதன் வரவேற்று பேசினார். விவேகானந்தர் கேந்திர இயற்கை வள அபிவிருத்தி திட்ட செயலாளர்வாசுதேவ் பழங்குடியினர் அறக்கட்ட ளை தலைவர் ஜெகதீஷ் மிஸ்ரா, பேராசிரியர் சிலிப்பி ரஸ்தோகி, ஜெயஸ் சங்கவி, பியூஸ்மூண்டா, டாக்டர் மனோஜ் குமார்உள் பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் டாக்டர் ராஜேந்திரன் நன்றி கூறினார். மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்