search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு பேரணி
    X

    கன்னியாகுமரியில் ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு பேரணி

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் இன்று காலை பேரணி தொடங்கியது.

    கன்னியாகுமரி :

    8-வது தேசிய ஆயுர்வேத தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் இன்று காலை பேரணி தொடங்கியது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் பேரணியை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் வழியாக களியக்காவிளையை சென்றடைகிறது

    Next Story
    ×