search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுத பூஜை விழா"

    • விழாவில் சுரண்டை நகராட்சியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு சேர்மன் வள்ளி முருகன் இனிப்புகளை வழங்கினார்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், தலைமை கணக்காளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுரண்டை நகராட்சியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு இனிப்புகளை சேர்மன் வள்ளி முருகன் வழங்கினார்.விழாவில் கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், வேல்முத்து, மாரியப்பன், ராஜேஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பூஜையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • ஆயுதபூஜை விழா உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் கொண்டாடப்பட்டது.

    உடுமலை:

    அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுதபூஜை விழா முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், கட்சியின் மாவட்ட இணை செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், அனைத்துலக எம்ஜிஆர்., மற்றும் துணை செயலாளர் வக்கீல் மனோகரன், மாவட்ட சார்புஅணி துபாய் ஆறுமுகம், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பர் ராஜன், முருகேசன், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பூபதி , பெரிய கோட்டை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் விஸ்வநாதன், சரண்யா தேவி, வனிதாமணி , யூசி செல்வராஜ், சின்ன வீரம்பட்டி காளிமுத்து, வக்கீல் கண்ணன் , கர்ணசேகரன் ,கவுன்சிலர் சௌந்தர்ராஜன் , சந்தை வேலாயுதம், சரவணன் மற்றும் நிர்வாகிகள் உட்பட சார்பு அணி நிர்வாகிகள் ஆயுத பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    ×