search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபத்தான நிலையில்"

    • ஜலகண்டாபுரம் பேரூராட்சி அருகே உள்ள பொது நூலகம் 1995 -ம் கட்டப்பட்டது.
    • இந்த நூலகத்திற்கு நூலக வாசிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் என 100 -க்கும் மேற்பட்டவர்கள் தினமும் வந்து புத்தகம் படிக்கின்றனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பேரூராட்சி அருகே உள்ள பொது நூலகம் 1995 -ம் கட்டப்பட்டது. இங்கு 4,470 பேர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த நூலகத்திற்கு நூலக வாசிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் என 100 -க்கும் மேற்பட்டவர்கள் தினமும் வந்து புத்தகம் படிக்கின்றனர்.

    மேற்கூரை சேதம்

    இந்த நிலையில் தற்போது கட்டிட மேற்கூரை ஆங்காங்கே இடிந்து மிகவும் சேதம் அடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது.

    இது குறித்து நூலக வாசிகள் கூறும்போது, இந்த கட்டிடத்தின் மேற்கூரை ஆங்காங்கே இடிந்து விழுவதால் அச்சம் அடைந்து மாணவ- மாணவிகள் படிக்க வருவதில்லை. பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளுக்கு இது குறித்து பல முறை மனு கொடுத்தும் இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே நூலகத்தை சரி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×