search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனக்குழி"

    • இன்று (5-ந்தேதி) மாலை 6.30 மணியளவில் தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது.
    • பாலப்பள்ளம் சி.எஸ்.ஐ. ஆயர் சாம் றிச்சர்டு நெல்சன் தலைமை தாங்குகிறார்.

    குளச்சல்:

    குளச்சல் அருகே ஆனக்குழி சி.எஸ்.ஐ. ஆயர் மண்டல திருச்சபையில் 203-வது சபை நாள் இன்று (5-ந்தேதி) மாலை 6.30 மணியளவில் தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. முதல் நாள் திருச்சபை ஆயர் ஆமோஸ் ஆல்பர்ட் முன்னிலையில் கரும்பாட்டூர் சி.எஸ்.ஐ. ஆயர் ராஜா ஸ்டாலின் சிறப்பு செய்தி அளிக்கிறார்.

    பாலப்பள்ளம் சி.எஸ்.ஐ. ஆயர் சாம் றிச்சர்டு நெல்சன் தலைமை தாங்குகிறார். 2-ம் நாள் கிறிஸ்துபுரம் சி.எஸ்.ஐ. ஆயர் கில்டன் தயானந்த் தலைமை தாங்குகிறார். 3-ம் நாள் கல்லுக்கூட்டம் சேகர சி.எஸ்.ஐ. ஆயர் றிங்கள் ஜெயக்குமார் தலைமை தாங்குகிறார். 3-ம் நாள் காலை 10 மணிக்கு உபவாச கூடுகை நடக்கிறது. 4-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மத்திக்கோடு சேகர ஆயர் ஜெயக்குமார் தலைமையில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் சிறப்பு செய்தி அளிக்கிறார். திருச்சபை ஆயர் ஆமோஸ் ஆல்பர்ட் மற்றும் மத்திக்கோடு சேகரத்திற்குட்பட்ட ஆயர்கள், திருப்பணியாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு செய்தியை தொடர்ந்து கல்வி பரிசு, நன்றி படைப்பு மற்றும் அன்பின் விருந்து ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆனக்குழி சி.எஸ்.ஐ. சபைக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×