search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண் மயில் மீட்பு"

    • கிணற்றில் இரவு ஆண் மயில் ஒன்று தவறி கீழே விழுந்துள்ளது.
    • ஆண் மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் வழியில் உள்ள சலங்கபாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கிணறு ஒன்று 100 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.

    இந்த கிணற்றில் நேற்று இரவு ஆண் மயில் ஒன்று தவறி கீழே விழுந்துள்ளதாக பவானி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பவானி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் கயிறு கட்டி கீழே இறங்கி கிணற்றில் இருந்த ஆண் மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

    ×