search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ பேரணி"

    • கொரோனா தடுப்பூசி முகாமில் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் கடந்த 11- ந்தேதி முதல் வருகின்ற 18- ந்தேதி வரை போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாரம்  கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சியில் வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடன் சுமார் 145 ஆட்டோக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி ஏமப்பேரில் நிறைவடைந்தது.

    முன்னதாக ஆட்டோ பேரணியில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ்,மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு) விஜய கார்த்திக்ராஜ், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ், கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்துஅலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×