search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டம்"

    • நள்ளிரவில் போலீசார் கடும் கட்டுப்பாடு
    • நட்சத்திர ஓட்டல்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.

    கன்னியாகுமரி:

    ஆங்கில வருடமான 2022-ம் ஆண்டு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்து 2023-ம் ஆண்டு மலர்ந்தது. புத்தாண்டு பிறந்ததை யொட்டி சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. கன்னியாகுமரியிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி கன்னியா குமரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டு இருந்தன. நட்சத்திர ஓட்டல்களில் இரவு 7 மணி முதல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சிகள் தொடங்கியது. நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடல் - பாடல், குத்தாட்டம், பரத நாட்டியம், நடனநிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள், மெல்லிசை கச்சேரி, மேஜிக் ஷோ, குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள்தேர்வு, சிறந்த தம்பதிகள்தேர்வு, வாண வேடிக்கை, குழந்தை களுக்கானவிளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன.

    மேலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்த போது அதிர் வேட்டுகள் முழங்க பலூன்கள் பறக்க விடப்பட்டு கேக் வெட்டி புத்தாண்டு கொண் டாடப்பட்டது. கன்னியா குமரியில் நடந்த இந்த புத்தாண்டு கொண்டாட் டத்தில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாபயணிகள் நேற்றுமுன்தினம் முதலே வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். புத்தாண்டு பிறக்கும் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒரு வரை ஒருவர் கட்டித்தழுவி முத்தமிட்டு தங்களது புத்தாண்டு நல்வாழ்த்துக் களை தெரிவித்துக் கொண் டனர்.

    புத்தாண்டு கொண்டாட் டத்தை யொட்டி கன்னியா குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்து இருந்தனர்.

    கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண் டாட தடை விதிக்கப் பட்டது. இரவு நேரங்களில் புத்தாண்டு கொண் டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துகிறார்களா? என்றும் போலீசார் தீவிர மாக சோதனை நடத்தி னார்கள். அதேபோல குடி போதையில் யாராவது வாகனம் ஓட்டுகிறார்களா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்துவந்தனர்.

    ×