search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்சேர்ப்பு முகாம்"

    • சென்னையில் வருகிற 1-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் முருகேஷ் தகவல்

    திருவண்ணாமலை:

    சென்னையில் வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ள விமானப்படை குழு மருத்துவ உதவியாளர் பிரிவுக்கான ஆட்சேர்ப்பு முகாமில் திருவண்ணாமலையில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவ உதவியாளர் பிரிவு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஆண் இந்திய குடிமக்களை விமானப்படை குழு (ஒய் பிரிவு) மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்ப்பதற்கான ஆள் சேர்ப்பு தேர்வு சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) முதல் 8-ந் தேதி (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது.

    இப்பணிக்கு திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்த்தில் இருந்து குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த 27-6-2002 முதல் 27-6-2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

    இளைஞர்களுக்கு உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு ஆகிய தேர்வுகள் வருகிற 1-ந் தேதி மற்றும் 2-ந் தேதிகளில் நடத்தப்படும். மருத்துவ உதவியாளர் பணிக்கு 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பி.எஸ்சி. மருத்துவம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து திருமணம் ஆகாதவர்கள் 27-6-1999 முதல் 27-6-2004 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும், திருமணமான விண்ணப்பதாரர்கள் 27-6-1999 முதல் 27-6-2002 வரையில் காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

    இணையதள முகவரி பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.14 ஆயிரத்து 600 வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் ராணுவ சேவை ஊதியம் உள்பட குறைந்தபட்ச மொத்த ஊதியம் ரூ.26 ஆயிரத்து 900 ஆகும்.

    இப்பணிக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு உடல் தகுதித் தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு ஆகிய தேர்வுகள் வருகிற 7 மற்றும் 8-ந் தேதிகளில் நடத்தப்படும்.

    எனவே ஆர்வமுள்ளவர்கள் MY IAF என்ற செயலி மூலமாகவோ, http://airmenselection.cdac.in./CASB என்ற இணையதளத்திலும் வெளியிட்டு உள்ள அறிவிப்பை பார்த்து தேர்வு முறை, தேர்வு நாளன்று எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் உள்பட அனைத்து விவரங்களையும் அறிவித்து தகுதியுடைவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு 04175- 233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேவைாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×