search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிப்பெருவிழா"

    • செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பெரியபாளையம் பவானி அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
    • பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி மாத விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    திருவள்ளூர்:

    பெரியபாளையம் பவானியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இங்கு நடைபெறும் விழாக்களில், ஆடி மாத விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆடிப் பெருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 14 வாரங்கள் விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    நேர்த்தி கடன் செலுத்த தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து பெரியபாளையம் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

    பக்தர்களின் வசதிக்காக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி, கோவிலை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு, குடிநீர், கழிப்பிட வசதி, இருப்பிட வசதி உட்பட பல்வேறு வசதிகள் குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இதில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்தராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் லட்சுமணன், ஊத்துக் கோட்டை துணை கண்காணிப்பாளர் சாரதி கலந்து கொண்டனர்.

    ×