search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் தினம்"

    • கல்விக் குழுமச் செயலாளர், காந்திமதி மோகனகிருஷ்ணன், டாக்டர் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தைத் திறந்து வைத்தார்.
    • விழாவில் பிலோமினா குழுவினர் யோகாசனம் நடைபெற்றது.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. பாரத் கல்விக்குழுமச் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கணிப்பொறி ஆசிரியை ஜோஸ்பின் ஸ்னேகா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியை உமா வரவேற்றார். கல்விக் குழுமச் செயலாளர், காந்திமதி மோகனகிருஷ்ணன், டாக்டர் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தைத் திறந்து வைத்தார். ஆசிரியை சுப்புலட்சுமி கல்விக்குழுமச் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். துணைமுதல்வர் பாலசுந்தர் காந்திமதி மோகனகிருஷ்ணனுக்கு சிறந்த கல்வியாளருக்கான ஏகலைவன் விருதை வழங்கினார்.

    விழாவில் பிலோமினா குழுவினர் யோகாசனமும், தேவி, விஜயலட்சுமி ஆகியோரின் ஆசிரியர் தின ஆங்கில உரையாடலும் நடைபெற்றது. மஞ்சுளா குழுவினரின் வில்லுப்பாட்டும், அப்துல்லா குழுவினரின் சைகை நாடகமும் நடைபெற்றது. ஆசிரியர் ஜீவா பாடல்கள் பாடினார். சிறப்பு விருந்தினர் காந்திமதி மோகனகிருஷ்ணன் சிறப்புரையாற்றி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.

    தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். ஆசிரியர் பண்ணிசைப் பாடலுடன் விழா நிறைவு பெற்றது. பாரத் கல்விக்குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

    ×