search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்"

    • நெடுஞ்சாலை துறையினர் தானாக முன்வந்து நோட்டீ சுகள் வழங்கினர்.
    • ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அண்ணா மடுவில் இருந்து தவிட்டுப்பாளையம் பாலம் வரை சாலை விரி வாக்கம் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் இருந்து தவுட்டுப்பாளையம் பாலம் வரை சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருந்ததனால் அவற்றை அகற்றுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் தானாக முன்வந்து நோட்டீ சுகள் வழங்கினர்.

    அவற்றை பெற்று கொண்ட ஒரு சிலர் தானாக முன்வந்து அகற்றினார்கள்.

    இதில் அகற்றாத பகுதிகளை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளார் பிரபாகரன், உதவி பொறியாளர் சதா சிவம் ஆகியோர் முன்னி லையில் சாலை பணியாளர்கள் மற்றும் அந்தியூர் போலீசார் உதவியோடு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடை பெற்றது.

    இதில் நெடுஞ்சா லைத்துறை அலுவலர் ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி மற்றும் செல்வன் உள்பட பலர் உடனிருந்து பணிகளை செய்தனர்.


    ×