search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்தி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சவுமியாவின் விருப்பத்தின்படி ஓவியம் வரைந்து கொடுக்க யாரும் முன்வரவில்லை.
    • சாஜனின் ஓவியத்தை ஓவியர் உன்னி வர்ணசாலா வரைந்து வருகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சாஜன். இவரது மனைவி சவுமியா. (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). வெவ்வேறு மதத்தை சேர்ந்த இவர்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சாஜன் ஹார்டுவேர் என்ஜினீயராகவும், சவுமியா வங்கி ஊழியராகவும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் சாஜனுக்கு மூளையில் பிரச்சனை ஏற்பட்டது. அவரை காப்பாற்ற மனைவி பல விதங்களில் போராடினார். சாஜனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இருந்தபோதிலும் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். கணவரின் இறப்பு சவுமியாவை வெகுவாக பாதித்தது. கணவரின் மறைவால் அவர் மனம் உடைந்தார். சவுமியா மற்றும் சாஜன் ஆகிய இருவரும் எந்த ஒரு மதத்தின் மீதும் விருப்பின்றி, எந்தவித மத நம்பிக்கைகளுக்கும் இடம் கொடுக்காமல் வாழ்ந்து வந்துள்ளனர்.

    இதனால் தனது கணவரின் உடலை எரிக்க சவுமியா முடிவு செய்தார். அதன்படி சாஜனின் உடல் எரிக்கப்பட்டது. அவரது அஸ்தி மனைவி சவுமியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை வழக்கம் போல் நீர்நிலையில் கரைக்க சவுமியா விரும்பவில்லை.

    மாறாக கணவரின் அஸ்தியை ஏதாவது ஒரு ஓவிய கலைஞரிடம் கொடுத்து, அதனை பயன்படுத்தி ஓவியம் வரைந்து தன்னுடன் வைத்துக்கொள்ள முடிவு செய்தார். அதன்படி பல கலைஞர்களை அவர் சந்தித்திருக்கிறார்.

    ஆனால் சவுமியாவின் விருப்பத்தின்படி யாரும் ஓவியம் வரைந்து கொடுக்க முன்வரவில்லை. இறுதியில் உன்னி வர்ணசாலா என்ற ஓவியக் கலைஞர், சவுமியாவின் விருப்பப்படி அவரது கணவரின் அஸ்தியை பயன்படுத்தி ஓவியம் வரைந்து கொடுக்க சம்மதித்தார்.

    இதையடுத்து அவரிடம் தனது கணவரின் அஸ்தியை சவுமியா ஒப்படைத்தார். மேலும் தனது கணவரின் புகைப்படம் ஒன்றையும், ஓவிய கலைஞரிடம் வழங்கினார். அதனை வைத்து சாஜனின் ஓவியத்தை ஓவியர் உன்னி வர்ணசாலா வரைந்து வருகிறார்.

    இறந்தவரின் அஸ்தியை பயன்படுத்தி ஓவியம் வரைவது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் இதற்கு முன்பு இதுபோன்று செய்ததில்லை. வாழ்க்கையில் இப்படியொரு வாய்ப்பு எனக்கு கிடைப்பது இதுவே முதல் முறையாகும். இது கடைசி முறையாகவும் இருக்கலாம். ஒரு கலைஞனாக இந்த பணி எனக்கு மிகவும் சவாலானது. தற்போது நான் ஓவியத்தை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பணியில் பிஸியாக இருந்ததால் தாயின் இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத மகள், அஸ்தியை கொரியரில் கேட்டு வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக இறுதிச்சடங்கை பார்த்துள்ளார்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அருகே உள்ள மனோர் கிராமத்தை சேர்ந்த நீராபாய் படேலின் மனைவி தீரஜ் படேல் உடல்நலக்குறைவால் சமீபத்தில் இறந்துள்ளார். தாய் இறந்த செய்தியை குஜராத்தில் வசிக்கும் மகளிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

    அதற்கு தான் வேலையில் ரொம்ப பிஸியாக இருப்பதால் ஊருக்கு வர முடியாது என மகள் பதில் கூறியுள்ளார். அதோடு வாட்ஸ் ஆப் வீடியோ காலில் தாயின் முகத்தை காட்டுமாறும் ஊரில் இருப்பவர்களிடம் கேட்டுள்ளார். அதே போல தாய்க்கு நடந்த இறுதிச் சடங்கை அவர் வாட்ஸ் அப்பிலேயே பார்த்தார்.

    அவரது இந்த நடவடிக்கையால், ஊர் மக்கள் கடும் கோபமடைந்தனர். இதனிடையே, இறுதிச் சடங்கில் தான் பங்கேற்க முடியவில்லை, அஸ்தி கரைப்பதற்காக வர வேண்டும் என்று அவர்கள் அழைத்துள்ளனர். அதற்கு அவர், அஸ்தியை கொரியரில் அனுப்பிவிடுங்கள் என்று பதில் கூறியுள்ளார்.

    இதனை அடுத்து தாயின் உடலை தகனம் செய்த கிராம மக்களே, அவரது அஸ்தியையும் மகளுக்கு கேட்டதுபோல கொரியரில் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
    ×