search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகர்மலை"

    • அழகர்மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
    • மாலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தீபம் ஏற்றப்படும்.

    மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கள்ளழகர் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) பவுர்ணமியன்று நடக்கிறது.

    அன்று காலையில் சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடத்தி பெரிய தோளுக்கினியானில் சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகரை எழுந்தருளச் செய்கிறார்.

    பின்னர் திருமடப்பள்ளி யில் உள்ள நாச்சியாருக்கு திருமஞ்சனம் செய்து, நாச்சியார் முன் புன்னியவசனம், தீப பூஜை நடத்திய பிறகு மாலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் நெய் தீபங்களை பெருமாள் சன்னதி, விஷ்வக்சேனர் சன்னதி, சேத்திரபாலகர் சன்னதி, கருடன் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, நரசிம்மர் சன்னதி, ஆண்டாள் சன்னதி, சரஸ்வதி சன்னதி, கம்பத்தடி போன்ற சன்னதிகளில் தீபங்கள் ஏற்றப்படுகிறது.

    பிராம்ன சீர்பாதமாக பெருமாளை தெற்கு படியேற்றத்தின் வழியாக பிரகாரம் எழுந்தருளி ஆழ்வார்கள் சன்னதியில், தீர்த்தம், சடாரி, கோஷ்டி நடந்து பெருமாளை தீபத்துடன் குடவரை வழியாக உறியடி மண்டபத்திற்கு மேல்புறம் பார்சட்டத்தில் எழுந்தருளச்செய்கிறார்.

    பின்னர் புன்னியவசனம் சொக்கப்பானை, புரோ ஷேனை, பூஜை நடந்த பிறகு அகல் தீபத்தை சொக்கப்பானையில் கொளுத்தி பெருமாள் தீப உற்சவம் நடைபெறும்.

    மேலும் அழகர்மலையின் உச்சியில் அமைந்துள்ள வெள்ளிமலையாண்டி கோவில் கோம்பை கொப்பரையில் 200 லிட்டர் நெய் ஊற்றி மாலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தீபம் ஏற்றப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×