search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகப்பா பல்கலைக்கழகம்"

    • அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 616 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
    • இதில் 1,125 மாணவ- மாணவிகளுக்கு கவர்னர் ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா கவர்னர் ரவி தலைமையில் நடந்தது.

    கடந்த 2019-20, 20-21, 2021-22 கல்வி ஆண்டு களுக்காக தொடர்ந்து 3 வருடங்கள் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் மாணவ- மாணவிகள் பட்டங்கள் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். இது குறித்து பல்வேறு தரப்பினர் பட்டமளிப்பு விழாவை விரைந்து நடத்த வற்புறுத்தி வந்தனர். அதனை ஏற்று அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது.

    அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி வரவேற்று பேசினார்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஒரு இலக்கிய முனைவர் பட்டம், 4 அறிவியல் முனை வர் பட்டமும், 647 முனைவர் பட்டமும் (பி.எச்டி) வழங்கப்பட்டது.

    மேலும் பல்வேறு துறைகளில் பயின்ற மாணவர்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பயின்றவர்கள் என கடந்த 3 ஆண்டுகளில் பட்டம் பெறாத 1 லட்சத்து 9 ஆயிரத்து 616 மாணவ- மாணவிகள் பட்டங்களை பெற்றனர். இதில் 1,125 மாணவ- மாணவிகளுக்கு கவர்னர் ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.

    இந்த விழாவில் மத்திய கல்வி மந்திரியும், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மந்திரியுமான தர்மேந்திர பிரதான் முதன்மை விருந்தினராகவும், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து ெகாண்டனர்.

    பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள், பெற்றோர்கள், உறவி னர்கள் மற்றும் நண்பர்க ளிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    ×