search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alagappa University"

    • அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 616 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
    • இதில் 1,125 மாணவ- மாணவிகளுக்கு கவர்னர் ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா கவர்னர் ரவி தலைமையில் நடந்தது.

    கடந்த 2019-20, 20-21, 2021-22 கல்வி ஆண்டு களுக்காக தொடர்ந்து 3 வருடங்கள் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் மாணவ- மாணவிகள் பட்டங்கள் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். இது குறித்து பல்வேறு தரப்பினர் பட்டமளிப்பு விழாவை விரைந்து நடத்த வற்புறுத்தி வந்தனர். அதனை ஏற்று அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது.

    அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி வரவேற்று பேசினார்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஒரு இலக்கிய முனைவர் பட்டம், 4 அறிவியல் முனை வர் பட்டமும், 647 முனைவர் பட்டமும் (பி.எச்டி) வழங்கப்பட்டது.

    மேலும் பல்வேறு துறைகளில் பயின்ற மாணவர்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பயின்றவர்கள் என கடந்த 3 ஆண்டுகளில் பட்டம் பெறாத 1 லட்சத்து 9 ஆயிரத்து 616 மாணவ- மாணவிகள் பட்டங்களை பெற்றனர். இதில் 1,125 மாணவ- மாணவிகளுக்கு கவர்னர் ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.

    இந்த விழாவில் மத்திய கல்வி மந்திரியும், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மந்திரியுமான தர்மேந்திர பிரதான் முதன்மை விருந்தினராகவும், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து ெகாண்டனர்.

    பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள், பெற்றோர்கள், உறவி னர்கள் மற்றும் நண்பர்க ளிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட சுவாமிநாதனுக்கு துணைவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    காரைக்குடி:

    தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சுவாமிநாதனை 3.5.2018 முதல் மூன்றாண்டுகளுக்கு நியமித்துள்ளார்.

    இவர் சிறந்த கல்வியாளர். 32 ஆண்டுகளாக கணிதவியல் பாடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பின்தங்கிய மாணவர்கள் பலரையும் தனது கற்பிக்கும் திறனால் முன்னுக்கு கொண்டு வந்தவர்.

    சுவாமிநாதன் கணிதத்தில் எம்.எஸ்.சி.,எம்.பில். மற்றும் கணிதவியல் பாடத்தில் கல்வியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

    2002- 2003-ம் கல்வியாண்டில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். 2005-ம் ஆண்டு “இந்திய கல்வியியலில் சிறந்த ஆசிரியர்”விருது பெற்றுள்ளார். 2014-ம் ஆண்டில் இருந்து சுவாமிநாதன் சிவகங்கை மாவட்ட சாரணர் இயக்கத்தின் ஆணையராக பணியாற்றி வருகிறார். பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு கணிதப் பாடப்புத்தகங்களை எழுதி உள்ளார்.

    தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணிதப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். வெளிநாடுகளுக்கும் கல்விப்பயணமாக சென்றுள்ளார்.

    அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட சுவாமிநாதன், துணைவேந்தர் சுப்பையாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    ×