search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிஞர்"

    • 22-வது ஆண்டு விழாவையொட்டி நடந்தது
    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-மாவது ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி புத்தாயிரம் ஆண்டு மலரும்போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி இதனை திறந்து வைத்தார். இந்தசிலைநிறுவிய 22-வது ஆண்டுவிழா இன்று காலை கொண்டாடப்பட்டது.

    குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த விழாவை கொண்டாடின. இதையொட்டிகாலை 9 மணிக்கு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில்இருந்து தமிழ் அறிஞர்கள் தனி படகுமூலம் சென்று 133அடிஉயர திருவள்ளுவர்சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்..

    கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய பொதுச் செயலாளர் டாக்டர் நாகேந்திரன், எம். ஆர். காந்தி எம்.எல்.ஏ. , தேரூர் கவிமணி நற்பணி மன்ற செயலாளர் புலவர் சிவதாணு, குறழகம் நிறுவனர் தமிழ்குழவி, கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய பொருளாளர் சிதம்பர நடராஜன், தமிழ் இயக்க நிர்வாகி கீதா, தமிழன்னை தமிழ் சங்க நிறுவனர் கருங்கல் கண்ணன், அகில உலக திருவள்ளுவர் அறக்கட்டளை தலைவர் ரத்தின தாஸ் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    ×