search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ணவ்"

    • சின்னத்திரை நடிகர் அர்ணவ், தன்னை சித்ரவதை செய்வதாக கூறி, நடிகை திவ்யா புகாரளித்தார்.
    • நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

    சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

    சின்னத்திரை நடிகர் அர்ணவ், தன்னை சித்ரவதை செய்வதாக கூறி, நடிகை திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில், அர்ணவ் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அர்ணவ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


    அர்ணவ் -திவ்யா

    அதில், திவ்யாவும், தானும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், சக நடிகையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பொய்யான புகார் கூறி, திவ்யா அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டதாக கூறி உள்ளார். திவ்யாவை தாக்கியதாகக் கூறுவது தவறு. அவர் தான் என்னை துன்புறுத்தினார். இது தொடர்பாக எனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், திவ்யா அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து உள்ளனர் என்றும் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அர்ணவ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிடப்பட்டது.

    இதையடுத்து, அர்ணவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாலும், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும், தற்போதைய நிலையில் வழக்குகளை ரத்து செய்ய முடியாது எனக்கூறிய நீதிபதி, அர்ணவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • நடிகர் அர்னவை திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் சீரியல் நடிகை திவ்யா அறிவித்திருந்தார்.
    • கணவர் அர்னவ் தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

    சின்னத்திரை நடிகையான திவ்யா, தனது காதல் கணவரான சின்னத்திரை நடிகர் அர்னவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது 3 மாத கர்ப்பிணியான தன்னை, அர்னவ் மற்றொரு நடிகையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அடித்து காயப்படுத்தி விட்டதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

     

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

    பதிலுக்கு அர்னவ், மனைவி திவ்யா மீது தனது தரப்பு நியாயங்களை கூறி புகார்களை அளித்து வருகிறார். ஆனாலும் திவ்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய திவ்யா, அர்னவ் அளித்த புகாரில் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு திடீரென வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நண்பர்களுடன் சென்று மீண்டும் சிகிச்சை பெற்றார்.

     

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

    பின்னர் வெளியே வந்த திவ்யா, கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது, அர்னவ், என்னை மதம் மாற கட்டாயப்படுத்தினார். நான் முஸ்லிமாக மதம் மாறிய பின்னரே திருமணம் செய்து கொண்டார். இதற்கு தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடன் ஒரே வீட்டில் 45 நாட்கள் பேசாமல் இருந்தார். எனது செல்போன் எண்ணை 'பிளாக்' செய்து விட்டார்.

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

     

    எனது உடல் நலம் சரியான உடன் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுவேன். இது தொடர்பாக அரணவின் பெற்றோர் கேட்க வேண்டும். அவர்களது குடும்ப வாரிசு எனது வயிற்றில் வளர்கிறது. தற்போது டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெற்றேன். குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு திவ்யா நிருபர்களிடம் கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

     

    திவ்யா

    திவ்யா

    இதற்கிடையில் நேற்று தனது மனைவி திவ்யா, மனநல ஆலோசகரிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதற்கான மருத்துவ சீட்டையும், அவர் தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சியையும் அர்னவ் வெளியிட்டார். அதில் திவ்யா, அர்னவ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சியும், சண்டையிடும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

     

    கணவன், மனைவி இருவரும் மாறி, மாறி ஒருவர் மீது ஒருவர் புகார்களை கூறி வருவதுடன், தங்களது தரப்பில் உள்ள ஆதாரங்களையும் வெளியிட்டு வருவது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடிகர் அர்ணவ் தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டிருந்தார்.
    • நடிகர் அர்ணவ் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

    கேளடி கண்மணி என்கிற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் திவ்யா ஸ்ரீதர். தொடர்ந்து இவர் மகராசி, செவ்வந்தி போன்ற தொடர்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் அர்ணவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அர்ணவ் சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு தொடரின் மூலம் பிரபலமானவர். தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார்.


    திவ்யா - அர்ணவ்

    அர்ணவ்வை திருமணம் செய்து கொண்டதை நடிகை திவ்யா சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இதையடுத்து, நடிகை திவ்யா தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் அர்ணவ் தற்போது தன்னை விட்டு விட்டு ஹன்சிகா என்ற சீரியல் நடிகையுடன் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    திவ்யா - அர்ணவ்

    அதில், "நானும் அர்ணவ்வும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஒரே சீரியலில் நடித்தோம். அப்போது நட்பாக இருவரும் பழகி வந்தோம். கடந்த 5 வருடமாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தோம். திடீரென கல்யாணம் முடிந்ததை வெளியில் சொல்ல வேண்டாம் என கூறினார். ஆனால் நான் திருமணமான புகைப்படம், வீடியோ அனைத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டேன்.


    திவ்யா - அர்ணவ்

    அதன் பிறகு அந்த புகைப்படம் அனைத்தையும் நீக்க சொல்லி அர்ணவ் கூறினார். ஆனால் நான் நீக்கவில்லை. சமீபத்தில் நான் கர்ப்பமானதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன். இதன் பிறகு ரொம்ப டார்ச்சர் பண்ண ஆரம்பித்தார். அர்ணவ் என்னை அடித்து நான் கீழே விழுந்ததில் என்னுடைய வயிற்றில் அடிபட்டு இருக்கு. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்துட்டேன்.

    கொஞ்ச நேரம் கழித்து நான் முழித்து பார்த்தேன். அப்போது அவர் அங்கே இல்லை. பின்னர் வயிறு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்தேன். அர்ணவ் அடித்ததில் எப்போது வேண்டுமானாலும் கருகலையும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்" என்று திவ்யா கதறி அழுது வீடியோ வெளியிட்டார்.


    திவ்யா

    இதையடுத்து திவ்யாவிடம் போரூர் அனைத்து மகளிர் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்நிலையில், நடிகர் அர்ணவ் ஆவடி கமிஷனர் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், "திவ்யாவிற்கு முதலில் திருமணமாகி ஒரு குழந்தை இருந்த விஷயம் தனக்கு தெரிய வந்தும் இல்லற வாழ்வில் சந்தோஷமாக இருந்தோம். தற்போது தன்னை சந்தேகப்படும் படியாக திவ்யா பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் மனு அளித்துள்ளார்.

    இந்த புகார் போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் அர்ணவ் போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இவரிடம் 20 நிமிடங்களுக்கு மேலாக விசாரணை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×