search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை வெளியிட்ட வீடியோ.. செல்லம்மா சீரியல் ஹீரோ விசாரணைக்கு ஆஜர்..
    X

    அருணவ் - திவ்யா

    நடிகை வெளியிட்ட வீடியோ.. 'செல்லம்மா' சீரியல் ஹீரோ விசாரணைக்கு ஆஜர்..

    • நடிகர் அர்ணவ் தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டிருந்தார்.
    • நடிகர் அர்ணவ் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

    கேளடி கண்மணி என்கிற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் திவ்யா ஸ்ரீதர். தொடர்ந்து இவர் மகராசி, செவ்வந்தி போன்ற தொடர்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் அர்ணவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அர்ணவ் சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு தொடரின் மூலம் பிரபலமானவர். தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார்.


    திவ்யா - அர்ணவ்

    அர்ணவ்வை திருமணம் செய்து கொண்டதை நடிகை திவ்யா சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இதையடுத்து, நடிகை திவ்யா தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் அர்ணவ் தற்போது தன்னை விட்டு விட்டு ஹன்சிகா என்ற சீரியல் நடிகையுடன் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    திவ்யா - அர்ணவ்

    அதில், "நானும் அர்ணவ்வும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஒரே சீரியலில் நடித்தோம். அப்போது நட்பாக இருவரும் பழகி வந்தோம். கடந்த 5 வருடமாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தோம். திடீரென கல்யாணம் முடிந்ததை வெளியில் சொல்ல வேண்டாம் என கூறினார். ஆனால் நான் திருமணமான புகைப்படம், வீடியோ அனைத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டேன்.


    திவ்யா - அர்ணவ்

    அதன் பிறகு அந்த புகைப்படம் அனைத்தையும் நீக்க சொல்லி அர்ணவ் கூறினார். ஆனால் நான் நீக்கவில்லை. சமீபத்தில் நான் கர்ப்பமானதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன். இதன் பிறகு ரொம்ப டார்ச்சர் பண்ண ஆரம்பித்தார். அர்ணவ் என்னை அடித்து நான் கீழே விழுந்ததில் என்னுடைய வயிற்றில் அடிபட்டு இருக்கு. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்துட்டேன்.

    கொஞ்ச நேரம் கழித்து நான் முழித்து பார்த்தேன். அப்போது அவர் அங்கே இல்லை. பின்னர் வயிறு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்தேன். அர்ணவ் அடித்ததில் எப்போது வேண்டுமானாலும் கருகலையும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்" என்று திவ்யா கதறி அழுது வீடியோ வெளியிட்டார்.


    திவ்யா

    இதையடுத்து திவ்யாவிடம் போரூர் அனைத்து மகளிர் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்நிலையில், நடிகர் அர்ணவ் ஆவடி கமிஷனர் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், "திவ்யாவிற்கு முதலில் திருமணமாகி ஒரு குழந்தை இருந்த விஷயம் தனக்கு தெரிய வந்தும் இல்லற வாழ்வில் சந்தோஷமாக இருந்தோம். தற்போது தன்னை சந்தேகப்படும் படியாக திவ்யா பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் மனு அளித்துள்ளார்.

    இந்த புகார் போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் அர்ணவ் போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இவரிடம் 20 நிமிடங்களுக்கு மேலாக விசாரணை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×