search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு போக்குவரத்து பணிமனை"

    • கோவில்பட்டி பணிமனை முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள் இன்று அதிகாலை 1 மணிக்கு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊழியர்களை மிரட்டுவது மட்டுமின்றி, வேறு பயணிக்கு இடமாற்றம் செய்யும் நிலை இருப்பதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் 65 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த பணிமனையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோவை, ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கோவில்பட்டியை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கோவில்பட்டி பணிமனை முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள் இன்று அதிகாலை 1 மணிக்கு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகள், டிரைவர், கண்டக்டர் மற்றும் பணியாளர்களை அவதூறாக பேசுவதாகவும், கூடுதல் பணி நேரம் வழங்கி கட்டாயப்படுத்துவதாகவும், அவசர காலத்திற்கு ஊழியர்கள் விடுமுறை கேட்டால் கொடுக்க மறுப்பதாகவும், அதிகாலை பணிக்காக தங்கியிருக்கும் ஊழியர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்றும், இதுகுறித்து கேட்டால் ஊழியர்களை மிரட்டுவது மட்டுமின்றி, வேறு பயணிக்கு இடமாற்றம் செய்யும் நிலை இருப்பதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கிளை மேலாளர் சண்முகம் மற்றும் டிவிஷனல் மேனேஜர் (கிழக்கு) கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து பஸ்களை இயக்க தொடங்கினர். அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தினால் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

    • நீர்நிலை கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்தும், முட்புதர்கள் மண்டியும் கிட க்கிறது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட எர்ரணஹள்ளி ஊராட்சியில் பொதுபணிதுறை கால்வாய் மூலம் பல்வேறு ஏரிகளுக்கு உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது.

    தற்போது குப்பன் கொட்டாய் பாசன பிரிவு கால்வாய் மூலம் புங்குட்டை ஏரி, மன்னார் குட்டை ஆகிய ஏரிகள் நிரம்பி கடந்த 6 மாதங்களாக உபரி நீரானது தளவாய்ஹள்ளி, புதூர்,ரெட்டியூர், மூங்கப்பட்டி மற்றும் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை, குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலத்திலும் புகுந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

    மேலும் நீர்நிலை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் இப்பகுதியில் நீர்நிலை கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்தும், முட்புதர்கள் மண்டியும் கிட க்கிறது.

    இந்த உபரிநீர் பேளாரஹள்ளி ஊராட்சி தாமரை ஏரி வரை செல்வதால் இடைப்பட்ட சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு நீர் வழிகால்வாய்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், உபரி நீர் வெளியேற முடியாமல் அரசு போக்குவரத்து பணிமனையிலும் ஆங்காங்கே குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்தில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்வதுடன், பொதுமக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு நீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×