என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கோவில்பட்டியில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் தர்ணா
- கோவில்பட்டி பணிமனை முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள் இன்று அதிகாலை 1 மணிக்கு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஊழியர்களை மிரட்டுவது மட்டுமின்றி, வேறு பயணிக்கு இடமாற்றம் செய்யும் நிலை இருப்பதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் 65 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த பணிமனையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோவை, ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கோவில்பட்டியை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவில்பட்டி பணிமனை முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள் இன்று அதிகாலை 1 மணிக்கு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகள், டிரைவர், கண்டக்டர் மற்றும் பணியாளர்களை அவதூறாக பேசுவதாகவும், கூடுதல் பணி நேரம் வழங்கி கட்டாயப்படுத்துவதாகவும், அவசர காலத்திற்கு ஊழியர்கள் விடுமுறை கேட்டால் கொடுக்க மறுப்பதாகவும், அதிகாலை பணிக்காக தங்கியிருக்கும் ஊழியர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்றும், இதுகுறித்து கேட்டால் ஊழியர்களை மிரட்டுவது மட்டுமின்றி, வேறு பயணிக்கு இடமாற்றம் செய்யும் நிலை இருப்பதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கிளை மேலாளர் சண்முகம் மற்றும் டிவிஷனல் மேனேஜர் (கிழக்கு) கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து பஸ்களை இயக்க தொடங்கினர். அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தினால் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்