search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் சக்கரம்"

    • மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே மேக்கா மண்டபம் பகுதி யைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 50).

    இவரது மகள் ஆரல்வாய் மொழி அருகே செண்பக ராமன் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.மகளை பார்ப்பதற்காக இன்று காலை ஜோசப் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    மோட்டார் சைக்கிள் தோவாளை அருகே முத்து நகர் பகுதியில் குருச டிக்கு செல்லும் சாலை யில் திரும்பும் போது நெல்லை யிலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் ஜோசப் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட ஜோசப் பஸ்ஸின் பின் சக்கரத்தில் சிக்கினார். பஸ் சக்கரத்தில் சிக்கிய ஜோசப் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.அவரது மோட்டார் சைக்கிளும் பஸ்சுக்கு அடியில் சிக்கியது.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரல்வாய்மொழி போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பஸ்சுக்கு அடியில் சிக்கிய மோட் டார் சைக்கிளையும் சக்க ரத்தில் சிக்கிய ஜோசப்பை யும்போலீசார் போராடி மீட்டனர்‌.

    பின்னர் ஜோசப்பின் உடல் பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜோசப் பலியானது குறித்து அவரது மகள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மகளை பார்க்க வந்த இடத்தில் தந்தை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கமல்நாத் பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறான்.
    • ஓடிஏறுவதற்காக முயற்சித்தபோது தவறிவிழுந்தான். பஸ் சக்கரம் அவரது வலது தொடையில் ஏறியது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சின்னசேமக் கோட்டையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் என்பவர் மகன் கமல்நாத் (12). இவர் பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக பண்ருட்டி நகராட்சி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தான். அப்போது அரசுபேருந்து வழித்தடம் எண் 8 பி பஸ் வந்தது. அந்த பஸ், பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது.

    அதில்ஓடிஏறுவதற்காக முயற்சித்தபோது தவறிவிழுந்தான். பஸ் சக்கரம் அவரது வலது தொடையில்ஏறியது.இதனால்படுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவனை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×