search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பழத்தோட்டம்"

    • போட்டி போட்டு மக்கள் வாங்கி சென்றனர்
    • விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன் அடிப்படையில் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் தோட்டகலைத்துறை சார்பில் முதற்கட்டமாக டான்ஹோட விற்பனை மையத்தில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தக்காளி விற்பனையை குமரி மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணை மேலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் இன்று வடசேரி உழவர் சந்தை டான்ஹோட விற்பனை மையத்திலும் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    • சுற்றுலா பயணிகளை கவரும்வகையில் அழகு படுத்தவும் நடவடிக்கை
    • 31 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் 15 ஏக்கர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் மெயின் ரோட்டில் தமிழக அரசின் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான அரசு பழத்தோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துஉள்ளது.

    1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பழப்பண்ணை 31 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் 15 ஏக்கர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த அரசு பழத்தோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேற்று நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அவர் அரசு பழத்தோட்டத் தில் இயற்கை பொருட் களைக் கொண்டு சாக்லேட் தயாரிக்கப்படும் கூடத்தை சென்று பார்வை யிட்டார்.

    மேலும் அரசு பழத் தோட்டத்தில் உற்பத்தியாகும் பல்வேறு வகையான மாமரங்களையும் பார்வை யிட்டார். செடிகள் உற்பத்தி செய்யப்படும் இடத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

    சுற்றுச்சூழல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேலும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, கன்னியாகுமரி அரசு தோட்டக்கலைப் பண்ணை மேலாளர் சக்திவேல், வேளாண்மை உதவி இயக்குனர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    ×