search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கல்லூரி சாலை சேதம்"

    • மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
    • எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி உள்ளது. தேனி-ஆண்டிபட்டி மெயின்ரோ ட்டில் இருந்து சுமார் ½ கி.மீ. தூரத்தில் கல்லூரி உள்ளது.

    இந்த கல்லூரியில் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராள மான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் தார் சாலை பெயர்ந்து கற்கள் காணப்படுகிறது.

    இதனால் வாகன ஓட்டிகளின் டயர் அடிக்கடி பஞ்சர் ஆகிறது. மேலும் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×