search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யா வழி பக்தர்கள்"

    • கடலில் புனித நீராடி வழிபட்டனர்
    • வாகன பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், அதைத்தொடர்ந்து நித்திய பால் தர்மமும், அன்னதானமும் நடந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் முட்டப்பதி அய்யா வைகுண்ட சாமி பதி உள்ளது. இது அய்யா வைகுண்ட சாமியின் பஞ்சபதிகளில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி அய்யா வைகுண்டசாமி விஞ்சை பெற்ற இடமாகும். இந்த பதியில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை அன்று அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடை பெறுவது வழக்கம்.

    அதேபோல கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கி ழமையான இன்று அதி காலை 4 மணிக்கு முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் திருநடை திறக்கப் பட்டு அய்யாவுக்கு பணி விடைகள் நடந்தது.

    அதைத்தொடர்ந்து உகப்படிப்பு நடந்தது. பின்னர் வாகன பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், அதைத்தொடர்ந்து நித்திய பால் தர்மமும், அன்னதானமும் நடந்தது.

    முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியின் தர்மகர்த்தா மனோகரா செல்வன் அய்யா வைகுண்ட சாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழ மையான இன்று முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் அய்யாவழி பக்தர் கள் கூட்டம் அதிகம் காணப் பட்டது.

    அதிகாலை முதலே கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங் களை சேர்ந்த ஆயிரக்க ணக்கான அய்யாவழி பக்தர்கள் முட்டப்பதியில் குவிந்து இருந்தனர். அவர்கள் முட்டப்பதி தீர்த்தக்கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்தி ருந்து அய்யா வைகுண்ட சாமியை வணங்கி வழிபட்டு சென்றனர்.

    இதேபோல முட்டப்பதி யில் உள்ள அய்யா மூத்த நயினார் பதி, நரியன்விளை யில் உள்ள தெட்சணத்து துவாரகாவதி, ஆமணக்கின் விளை வாவைப்பதி, ரஸ்தாகாடு காயாம்பூபதி உள்பட அனைத்து அய்யா வைகுண்டசாமி பதிகளில் கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று அய்யாவுக்கு பணி விடைகள் நடந்தது.

    • அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி, அன்னதர்மம் போன்றவை நடைபெற்றது.
    • புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யா வைகுண்டசாமியை வணங்கி வழிபட்டு சென்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் முட்டப்பதி அய்யா வைகுண்ட சாமி பதி உள்ளது. இந்த வைகுண்டசாமி பதியில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முட்டப்பதி அய்யா வைகுண்ட சாமி பதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு அய்யாவுக்கு பணிவிடைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து உகப்படிப்பு நடந்தது. பின்னர் வாகன பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும் அதைத்தொடர்ந்து நித்திய பால் தர்மமும் அன்னதானமும் நடந்தது.

    இதில் கலந்துகொண்ட அய்யா வழி பக்தர்களுக்கு இனிப்பு, தேங்காய், பழம், திருநாமம், வெற்றிலை, பாக்கு மற்றும் பழங்கள் உள்ளிட்டவை இனிமமாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியின் மூத்த தர்மகர்த்தா பாலசுந்தரம் அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி, அன்னதர்மம் போன்றவை நடைபெற்றது.

    ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    அதிகாலை முதலே கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முட்டப்பதியில் குவிந்திருந்தனர். அவர்கள் முட்டப்பதி தீர்த்தக்கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யா வைகுண்டசாமியை வணங்கி வழிபட்டு சென்றனர்.

    இதே போல முட்டப்பதியில் உள்ள அய்யா மூத்த நயினார் பதி, கன்னியாகுமரி அருகே நரியன் விளையில் உள்ள தெட்சணத்து துவாரகாவதி, ஆமணக்கின்விளை வாவைப்பதி, ரஸ்தாகாடு காயாம்பூபதி உள்பட அனைத்து அய்யா வைகுண்டசாமி பதிகளில் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அய்யாவுக்கு பணிவிடைகள் நடந்தது.

    ×