search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயோத்தி பயணம்"

    • காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழும் இந்திய மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாக ஒற்றுமையாக பழகி வருகிறார்கள்.
    • மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் போற்றி பாதுகாத்தும் வருகிறார்கள்.

    சென்னை:

    அயோத்தியில் வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. பா.ஜனதா கோவில் திறப்பு விழாவை அரசியலுக்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளார்கள்.

    காங்கிரசின் இந்த புறக்கணிப்பு முடிவை கட்சிக்குள்ளேயே சிலர் விமர்சித்து வருகிறார்கள். குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தார்.

    தமிழகத்திலும் காங்கிரஸ் விவசாயப் பிரிவு காங்கிரஸ் தலைமையின் முடிவை விமர்சித்துள்ளது. இது தொடர்பாக விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழும் இந்திய மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாக ஒற்றுமையாக பழகி வருகிறார்கள். மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் போற்றி பாதுகாத்தும் வருகிறார்கள். எனவே ராமர் கோவில் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தம் என்பதால் வருகிற 22-ந்தேதி நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு சார்பில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50 ராமர் பக்தர்கள் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு எனது தலைமையில் அயோத்தி சென்று ராமரை வணங்கி வழிபட உள்ளோம்.

    மேலும் இந்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மத தலைவர்களையும் எதிர்க்கட்சி தலைவர்களையும் தவிர்க்காமல் விருப்பு வெறுப்பு இல்லாமல் இந்த நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முறையான அழைப்பு கொடுத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×