search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மா உணவகங்கள்"

    • சிவகாசி அம்மா உணவகங்களில் பொதுமக்கள் வருகை குறைந்தது.
    • தரமான உணவு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் அம்மா உணவகம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    பள்ளிக்கூடம், பத்திரப்பதிவு அலுவலகம், காய்கறி மார்க்கெட், வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அம்மா உணவகத்துக்கு காலை, மதியம் என 2 வேளையும் மக்கள் அதிகஅளவில் வந்து சாப்பிட்டு செல்வார்கள். சிலர் அவைகளை வாங்கி சென்று இரவு உணவாகவும் பயன்படுத்துவார்கள்.

    ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமின்றி, வசதியானவர்களும் அம்மா உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக சாப்பாட்டிற்கு தரம் குறைவான அரிசியை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அம்மா உணவகத்துக்கு சாப்பிட வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    இந்தமாற்றத்தை பார்த்தும் வேறு வழியின்றி உணவுகளை வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதனை முழுவதுமாக சாப்பிட முடியாமல் குப்பைத்தொட்டியில் வீசி செல்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்தும் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சிவகாசியை மாநகராட்சியாக மாற்றிய பிறகு பல்வேறு நவீன வசதிகள் செய்து வரும் அதிகாரிகள் அம்மா உணவகத்தில் உணவினை தரமாக வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சியில் உள்ள அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்
    • முன்பெல்லாம் ஒவ்வொரு அம்மா உணவகங்களிலும் நாள் ஒன்றுக்கு சுமார் 300 முதல் 400 ேபர் வரையில் சாப்பிடுவதற்கு வருவார்கள். தற்போது சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை அப்படியே பாதியாக குறைந்துள்ளது

    திருச்சி:

    திருச்சி மாநகரில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக அரசு வழிகாட்டுதலின் பேரில் மாநகராட்சி சார்பில் சாலையோரம் சுற்றித்திரியும் மக்கள் மற்றும் உணவில்லாமல் அல்லல்படும் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கும் வகையில் சுமார் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது.

    இந்த அம்மா உணவகங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் யாரும் வெளியில் வர அனுமதி இல்லாமல் இருந்த போதிலும் ஏைழ, எளிய மக்களின் பசியை போக்கும் இடமாக அம்மா உணவகங்கள் செயல்பட்டது.

    இங்கு குறைந்த விலையில் வயிராற சாப்பிடும் வகையில் உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக அம்மா உணவகங்கள் சரியாக செயல்படாமலும், பராமரிப்பு இல்லாமலும் இருப்பதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து திருச்சி மாநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், தொடர்ந்து மாநகராட்சி கட்டுப்பாட்டில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது. பல ஏழைகளின் பசியையும் போக்கி வந்தது.

    இங்கு ரூ.10 இருந்தால் போதும் இட்லி மற்றும் தக்காளி சாதம் சாம்பார் சாதம், தயிர்சாதம் உள்ளிட்ட வகைகளில் சாப்பிடலாம்.

    சாப்பிட்டு விட்டு பொது மக்களே தான் சாப்பிட்ட தட்டுகளையும் கழுவி வைக்கும் பழக்கம் பயன்பாட்டில் இருந்தது. மேலும் ஒவ்வொருவரும் தனித்தனியாக நின்று கொண்டு சுகாதாரமான முறையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    காலை நேரத்தில் இட்லி, மதியம் 12 மணி அளவில் சாப்பாடு என்ற வகையில் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி உள்ளது. அதாவது முன்பெல்லாம் ஒவ்வொரு அம்மா உணவகங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 300 முதல் 400 ேபர் வரையில் சாப்பிடுவதற்கு வருவார்கள். தற்போது சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை அப்படியே பாதியாக குறைந்துள்ளது என்று கூறினார்.

    திருச்சியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஓருவர் கூறும்போது, நான் கடந்த 2 ஆண்டுகளாக தினமும் கட்டிட ேவலைக்கு செல்வதற்கு முன்னதாக திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு வருகிறேன்.

    சிறந்த தரத்தில் உணவுகள் இருக்கும். ரூ.5 இருந்தால் போதும் காலையில் என்னுடைய சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் முடித்து விடுவேன்.

    ஆனால் தற்போது சில மாதங்களாக அம்மா உணவகங்களை சரியாக சுத்தம் செய்யாமல் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. சாப்பிட்டு விட்டு சென்ற டேபிள்களை கூட சுத்தம் செய்யாமல் இருக்கும் நிலையும் நீடித்து வருகிறது.

    மாநகராட்சி இதை கருத்தில் கொண்டு இந்த பிரச்சினைகளை சரி செய்தால் வருங்காலத்தில் தொடர்ந்து அம்மா உணவகங்கள் ஆதரவற்றவர்களின் பசிைய போக்கும் வகையில் செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.

    ×