search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amma restaurants"

    • சிவகாசி அம்மா உணவகங்களில் பொதுமக்கள் வருகை குறைந்தது.
    • தரமான உணவு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் அம்மா உணவகம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    பள்ளிக்கூடம், பத்திரப்பதிவு அலுவலகம், காய்கறி மார்க்கெட், வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அம்மா உணவகத்துக்கு காலை, மதியம் என 2 வேளையும் மக்கள் அதிகஅளவில் வந்து சாப்பிட்டு செல்வார்கள். சிலர் அவைகளை வாங்கி சென்று இரவு உணவாகவும் பயன்படுத்துவார்கள்.

    ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமின்றி, வசதியானவர்களும் அம்மா உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக சாப்பாட்டிற்கு தரம் குறைவான அரிசியை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அம்மா உணவகத்துக்கு சாப்பிட வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    இந்தமாற்றத்தை பார்த்தும் வேறு வழியின்றி உணவுகளை வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதனை முழுவதுமாக சாப்பிட முடியாமல் குப்பைத்தொட்டியில் வீசி செல்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்தும் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சிவகாசியை மாநகராட்சியாக மாற்றிய பிறகு பல்வேறு நவீன வசதிகள் செய்து வரும் அதிகாரிகள் அம்மா உணவகத்தில் உணவினை தரமாக வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×