search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பு எய்தல்"

    • சோழவந்தானில் விஜயதசமியை முன்னிட்டு அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.
    • திரவுபதி அம்மன் கோவிலில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி 4 ரத வீதியும் வந்து வைகை ஆற்றுக்குச் சென்று அம்பு எய்தல் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் சோழவந்தான் பகுதி யில் விஜயதசமி விழாவை முன்னிட்டு வைகைஆற்றுக்கு சென்று அம்புஎய்தல் விழா நடைபெற்றது. அதன்படி சோழவந்தான் நாடார்உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளி யம்மன் கோவிலில் இருந்து அம்மன் புறப்பட்டு வைகை ஆற்றுக்கு சென்று அம்பு எய்தல் நடைபெற்றது. இதில் அண்ணாமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திரவுபதி அம்மன் கோவி லில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி 4 ரத வீதியும் வந்து வைகை ஆற்றுக்குச் சென்று அம்பு எய்தல் நடந்தது. பரம்பரை அறங்காவ லர்கள் அர்ச்சு னன், திருப்பதி, ஜவகர் லால்,குப்புசாமி உட்பட பக்தர்கள் கலந்து கொண்ட னர்.இதை முன்னிட்டு சன்மார்க்க சங்கத்தின் துணைத்தலைவர் கருப்பு சாமி தினசரி சொற்பொழிவு நடத்தினார்.

    ஜெனகைமாரியம்மன்கோவிலில்அம்மன்புறப்பட்டு வைகைஆற்றுக்குச்சென்று அம்புஎய்தல் விழா நடை பெற்றது.செயல் அலுவலர் இளமதி, அர்ச்சகர் சண்முக வேல் கோவில் பணியா ளர்கள் பூபதி கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சுவாமி சப்பரத்தில் புறப்பட்டு வைகைஆற்றுசென்று அம்பு எய்தல் விழா நடைபெற்றது.செயல் அலுவலர் சுதாமற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.பேட்டை வீரகாளியம்மன் கோவிலில் அம்மன் வீதிஉலா நடந்து.வைகைஆற்றுக்கு சென்று அம்பு எய்தல் விழா நடை பெற்றது. விழா ஏற்பாடு களை பேட்டைக்கு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×