search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைதிப்பேச்சு"

    • சாலையை சீரமைக்க கோரி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
    • சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து திருமுலைவாசல் செல்லும் சாலை மிகவும் மோசமடைந்து சாலையில் அதிக அளவு உள்ள பள்ளங்களால் வாகன ஒட்டிகள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தனர்.

    சீர்காழி -திருமுலைவாசல் செல்லும் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் கலந்து கொண்டனர்.

    நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் பங்கேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் சீர்காழி ஈசானியத்திலிருந்து திருமுலைவாசல் வரை செல்லும் சாலையை சீரமைப்பது எனவும் மாதானம் கூட்டு ரோடு அருகே தேவையான இடங்களில் வேக தடை அமைப்பது எனவும் உறுதியளித்தனர் இதனை அடுத்து மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    ×