search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைதி பேச்சு வார்த்தை"

    • கோதுமை கேட்பவர்களுக்கு சுத்தமான கோதுமை வழங்க வேண்டும்.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    திருவாரூர்:

    உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் அங்காடிகளில் கோதுமை வழங்கப்பட வில்லை என்பதை சுட்டிக்காட்டி உடன் கோதுமை கேட்பவர்களுக்கு சுத்தமான கோதுமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து முத்துப்பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி தலைமையில் காங்கிரசா ருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஹிர் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில், வரும் மாதங்களில் மக்களுக்கு தேவையான அளவு கோது மைகளை வழங்கு வதாக வட்ட வழங்கல் அலுவலர் உறுதியளித்தார்.

    கோதுமை கேட்பவர்களுக்கு சுத்தமான கோதுமை வழங்க வேண்டும்அதனை ஏற்று ஆர்ப்பாட்டத்தை காங்கிரசார் ஒத்தி வைத்தனர்.

    இந்த சமரச கூட்டத்தில் காங்கிரஸ் இலக்கிய அணி மாவட்ட தலைவர் தங்கராஜன், பஞ்சாயத்ராஜ் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஆனந்த் ரெட்டி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சயீத் முபாரக் ஆலிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×