search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்துல் கலாம் பிறந்தநாள் விழா"

    • விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
    • மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன.

    திருப்பூர்:

    திருமுருகன் பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேஷனல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 92-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாணவர்கள் வெண்மை, கருமை, சிகப்பு, மஞ்சள் வண்ணத்தில் ஆடை அணிந்து கலாமின் திருமுகம் தோன்ற அணிவகுத்து அமர்ந்த காட்சியானது கலாமை நேரில் காண்பது போன்ற எண்ண அலைகளை உருவாக்கியது. மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து ராக்கெட் ஒன்றை உருவாக்கி அதன் அருகில் கலாம் நிற்பது போன்று அமைத்திருந்த காட்சியும், கலாமின் நூற்றுக்கணக்கான பொன்மொழிகளை எழுதி மரங்களில் வரிசையாக தோரணம்போல் கட்டியிருந்த காட்சியும் காண்போரை கவர்ந்தது. "பசுமை இந்தியாவை" நினைவுபடுத்தும் விதமாக அவரைப் போலவே வேடமணிந்த மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் பள்ளியின் முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு, மேலாளர் ராமசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • வாணியம்பாடியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
    • மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் வருட்சா பவுண்டேஷன், இசுலாமிய கல்லூரி ரோட்ராக்ட் சங்கம், இன்னோவேட்டிவ் டீச்சர்ஸ் குழு மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆகியோர் இணைந்து மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 91-வது பிறந்தநாள் விழா இஸ்லாமிய கல்லூரி வளாகத்தில் கொண்டாடினர்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் டி.முஹம்மத் இலியாஸ் தலைமை தாங்கினார். கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர் சிவராஜி, பேராசிரியர் லியாகத் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் அருண்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், ஆம்பூர் ரோட்டரி சங்கம் தலைவர் சந்திரன், சின்னத்திரை புகழ் கே.பி.ஓய். அமீர் சந்தானம், தலைமை ஆசிரியை லதா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு அழைப்பாளராக பெங்களூர் யூ.ஆர்.எஸ்.சி முன்னாள் உதவி திட்ட இயக்குனர் விஞ்ஞானி அருணாச்சலம் கலந்துகொண்டு முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சிறப்புகள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியும், 91 மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

    பின்னர் சிந்தாமணி பெண்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தயாரித்த மாதிரி ஏவுகணையை விண்ணில் விட்டு சோதனையிட்டனர்.

    நிகழ்ச்சியை ஆம்பூர் பெத்தலகம் பள்ளி ஆசிரியர்கள் சரவணன் ஜெயசீலன், சிந்தகமாணி பெண்டா பஞ்சாயத் யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அருண்குமார், வாணியம்பாடி டி.வி.கே பள்ளி ஆசிரியர் நிகானந்தன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை வெண்ணிலா நன்றி கூறினார்.

    ×