search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்பில் மகேஷ் பொய்யமொழி"

    • தேர்விற்கான தேதி அறிவித்த பிறகு தலைைைமயாசிரியர்களை சந்தித்து அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
    • மழைக்காலம் என்பதால் பள்ளி உட்டகட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுக்கா தளி அருகே, மதகொண்டப்பள்ளி மாதிரிப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சார்பாக, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர மீளாயவுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கலந்து கொண்டு துவக்கி வைத்து அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறைக்கு அதிய முக்கியதுவம் அளித்து போதிய நிதி ஒதுக்கிடு செய்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தி உள்ளார்கள். பொதுத் தேர்விற்கான தேதி அறிவித்த பிறகு 18 மாவட்டங்களின் தலைைைமயாசிரியர்களை சந்தித்து அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்களை அன்பாகவும் அதே நேரத்தில் கண்டிப்புடனும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

    பொது தேர்வுகள் முடிவுகள் வரும் போது தான் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வி அலுவலர்களின் முழுமையான செயல்பாடுகள் தெரிய வரும். மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஊக்கத்துடன் செயல்படுத்த வேண்டும். மழைக்காலம் என்பதால் பள்ளி உட்டகட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து மாணவர்கள் ஆசிரியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    பழைய கட்டிடங்களை முழுமையாக அகற்றி புதிய கட்டிடங்கள் கட்ட கருத்துரு தயார் செய்து போதிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். மேலும் காலை உணவு திட்ட செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.
    • காய்ச்சல் பரவலால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து ஆலோசனைக்கு பின் முடிவு.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் உள்ளிட்ட பொருட்களை வழங்க மறுத்த விவகாரத்தில் இதுவரை 2பேர் கைது செய்யப்பட்டு, 5பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பாஞ்சாகுளத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

    பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும்.

    காய்ச்சல் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாநில சுகாதாரத்துறையுடனான ஆலோசனைக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×