என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அன்னபூரணி"
- நடிகை லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘அன்னபூரணி’.
- இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டனர்.
அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா முதன்மை கதாபாத்திரல் நடிக்கும் படம் 'அன்னபூரணி'. இவர்களுடன் மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், ராஜீவ் காந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
அன்னபூரணி படக்குழு
பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை மையமாக வைத்து திரில்லர் வடிவில் உருவாகியுள்ள 'அன்னபூரணி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அன்னபூரணி ஃபர்ஸ்ட் லுக்
இந்த போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி இணைந்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர். மேலும், நடிகர் ஜெயம் ரவி, "எங்கெல்லாம் அன்பினாலும் அதிகாரத்தினாலும் ஒரு பெண் அடக்கப்படுகிறாளோ அங்கெல்லாம் ஓர் அன்னபூரணி தேவைப்படுகிறாள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
எங்கெல்லாம் அன்பினாலும் அதிகாரத்தினாலும் ஒரு பெண் அடக்கப்படுகிறாளோ அங்கெல்லாம் ஓர் #அன்னபூரணி தேவைப்படுகிறாள்! Happy to reveal First Look of #ANNAPOORNI @lionaljoshua @dop_hector @jose_lijomol @thehari___ @rajiv_dmk #Losliya #KHPICTURES #ODOPICTURES #GovindVasanthaMusical pic.twitter.com/c4nXk3LetY
— Jayam Ravi (@actor_jayamravi) October 24, 2022
- ‘அன்ன தோஷம்’ என்பது ஒரு வகையான தோஷமாகும்.
- இந்த நாளில் விரதம் அனுஷ்டித்தால் அன்ன தோஷம் நீங்கும்.
'அன்ன தோஷம்' என்பது ஒரு வகையான தோஷமாகும். 'பசி' என்று கேட்கும் ஒருவருக்கு, உணவளிக்காமல் விரட்டியவர்களை இந்த தோஷம் பிடிக்கும்.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பசி என்று கேட்கும் பொழுது அவர்களுக்கு உணவளிக்காமல் இருப்பவர்கள், உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களை சாப்பிடவிடாமல் விரட்டியடிப்பவர்கள், கைவசம் உணவு இருந்தும் அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்கள், ஒழுங்காகப் பிண்டம் கொடுக்காதவர்கள், சிறு குழந்தைகளை பார்க்க வைத்து தான் மட்டும் சாப்பிடுபவர்கள் ஆகியோரை இந்த அன்ன தோஷம் பாதிக்கும்.
இந்த தோஷம் உள்ளவர்களின் வீட்டில், எவ்வளவு உழைத்தாலும் செல்வம் நிலைக்காது. அவர்கள் வெள்ளிதோறும் விரதமிருந்து அன்னபூரணியை வழிபட்டு வருவதுடன், இயன்றவரை அன்னதானங்களும் செய்தால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும். மனக்குறை அகலும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்