search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்ன பூஜை"

    • 21 டன் அரிசியை மலை போல் குவித்து வைத்து அன்ன பூஜை நடத்தப்பட்டது.
    • திரளான பெண்கள் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி இன்று காலை கன்னியாகுமரியில் அரிசியை மலைபோல் குவித்து வைத்து அன்ன பூஜை நடந்தது.இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    "வீரத்துறவி" என்று அனைவராலும் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி மகா சமாதி அடைந்தார். அவரது 120-வது மகா சமாதி அடைந்த தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள சுவாமி விவேகானந்தா சபாகிரகம் அரங்கத்தில் இன்று காலை அன்ன பூஜை நடந்தது.

    இதையொட்டி காலை 10 மணிக்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட21டன்அரிசியை மலை போல் குவித்து வைத்து அதன் மேலேஅன்னபூரணி சிலையை ஆவகாணம் செய்து வைத்துமலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடந்தது.

    மேலும் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, மற்றும்விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத்ராணடே ஆகியோரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுஇருந்தது.

    இவர்களது உருவப் படங்களுக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கேந்திர பிரார்த்தனையுடன் அன்ன பூஜை நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு அகில பாரத விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பத்மாவதி ஜெயராமன்,

    அகிலாண்டேஸ்வரி சிவசந்திர கணேஷ், காந்தா பாய் லலித்குமார், கௌரி ராஜசேகர், அய்யம்மாள் மாரியப்பன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி அன்னபூஜையைத் தொடங்கி வைத்தனர். கேந்திர சகோதரி குமாரி ராதா தேவி ஐக்கிய மந்திரம் பாடினார்.

    விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் வரவேற்று பேசினார். கேந்திர சகோதரி சாந்தி அன்னபூர்ண ஸ்தோத்திரம் பாடினார். கேந்திர சகோதரிலீலா பகவத் கீதையை தமிழில்பாடினார். பின்னர் அனைவரும் இணைந்து பகவத் கீதையை சமஸ்கிருதத்தில் பாடினார்கள்.

    கேந்திர அன்பர் இந்திராணி மங்கள ஆரத்தி காட்டினார். அதன்பிறகு அன்ன பூஜை அரிசியை அன்னையா பாண்டியன், மாது ஜி பட்டேல், பாபு ஆகியோர் விவேகானந்தகேந்திர துணைத் தலைவர் நிவேதிதாவிடம் வழங்கினார்கள்.

    வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தைச்சேர்ந்த சுவாமி சைதன்யானந்தாஜி மகராஜ், விவேகானந்த கேந்திர மூத்த ஆயுட்கால ஊழியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆசிரியரை வழங்கினார்கள். அதைத் தொடர்ந்து குவித்து வைக்கப்பட்டிருந்த அரிசிக்கு மங்கள ஆரத்தி நடத்தப்பட்டது.

    முடிவில் விவேகானந்த கேந்திர ஊழியர் பரமகுரு நன்றி கூறினார்.

    இந்த அன்ன பூஜை நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

    இந்த அன்னபூஜைக்காக குமரி நெல்லை தூத்துக்குடி தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து 21 டன் அரிசி சேகரிக்கப்பட்டது.

    • விவேகானந்தர் நினைவு தினமான 4-ந் தேதி நடக்கிறது
    • அன்ன பூஜை நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொள்கின்றனர்.

    கன்னியாகுமரி:

    சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கன்னியா குமரியில் 5 டன் அரிசியை மலை போல் குவித்து வைத்து அன்ன பூஜை நடக்கிறது.

    "வீரத்துறவி" என்று அனைவராலும் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி மகா சமாதி அடைந்தார். அவரது 121-வது மகா சமாதி அடைந்த தினம் நாளைமறுநாள் (திங்கட்கிழமை) கடை பிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் சபாகிரக அரங்கத்தில் நாளை மறுநாள் காலை அன்ன பூஜை நடக்கிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட 5 டன்அரிசியை மலைபோல் குவித்து வைத்து அதன் மேலே அன்னபூரணி சிலையை ஆவகாணம் செய்து வைத்து மலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடக்கிறது.

    மேலும் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத்ராணடே ஆகியோரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு பூஜை நடக்கிறது.

    இவர்களது உருவப் படங்களுக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். பின்னர் கேந்திர பிரார்த்தனையுடன் அன்ன பூஜை நிகழ்ச்சி தொடங்குகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு அகில பாரத விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். விவேகானந்தகேந்திர அகில இந்திய கேந்திர துணைத்தலைவர் நிவேதிதா குத்துவிளக்கு ஏற்றி அன்னபூஜையைத் தொடங்கி வைக்கிறார்.

    கேந்திர ஆயுள் கால ஊழியர்கள் ஐக்கிய மந்திரம் பாடுகிறார்கள். விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் வரவேற்று பேசுகிறார். கேந்திர பெண் தொண்டர்கள் அன்னபூர்ண ஸ்தோத்திரம் பாடுகிறார்கள். கேந்திர சகோதரிகள் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பகவத்கீதை மற்றும் விசுவரூப தரிசனம் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

    அதைத் தொடர்ந்து குவித்து வைக்கப்பட்டு இருக்கும் அரிசிக்கு மங்கள ஆரத்தி நடத்தப்படுகிறது. பின்னர் விவேகானந்தா கேந்திர அகில பாரத பொதுச்செயலாளர் பானுதாஸ், இணை பொதுச் செயலாளர் ரேகா தவேஆகியோர் வாழ்த்துரை வழங்கிறார்கள். விவேகானந்த கேந்திர முழு நேர ஆயுட்கால தொண்டர் என்.கிருஷ்ணமூர்த்தி ஆசியுரை வழங்குகிறார்.

    விவேகானந்த கேந்திர ஊழியர்கள் மற்றும் விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத்திட்ட நெல்லை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களது அனுபவங்களை பகிர்கின்றனர். விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்ட ராமநாதபுரம் மாவட்டபொறுப்பாளர் கள்கேந்திர பிரார்த்தனை பாடல்களை பாடுகின்றனர். முடிவில் விவேகானந்த கேந்திர ஊழியர் நன்றி கூறுகிறார்.

    இந்த அன்ன பூஜை நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொள்கின்றனர்.

    ×