search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிக்கு பாராட்டு"

    • முதுகுளத்தூர் பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய அதிகாரியை பொதுமக்கள் பாராட்டினர்.
    • நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி இணைந்து தண்டோரா மூலம் நடை பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஜாரில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    முதுகுளத்தூர் பஜாரில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.5 கோடியே 42 லட்சம் செலவில் சாலை அகலப்படுததும் பணி 2 மாதங்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் நடைபாதைகள் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி இணைந்து தண்டோரா மூலம் நடை பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் பிறகும் நடை பாதை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதால் போலீஸ் உதவியுடன் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டன.

    இந்த பணியின்போது உதவிகோட்டப் பொறியாளர் பிரேமானந், நெடுஞ்சாலை துறை உதவிப்பொறியாளர் மகேஸ்வரன், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, பேரூராட்சி பணியாளர்கள் ராஜேஷ், குமார், முருகேசன் உள்பட தூய்மைப் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்

    ×