search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிக பயணிகள்"

    • திருச்சியில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆபத்தான பயணம் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
    • மேலும் கட்டிட தொழிலாளர்கள் அதிக அளவில் ஷேர் ஆட்டோவை பயன்படுத்தும் போது படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்

    திருச்சி:

    திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்களின் போக்குவரத்திற்கு ஏதுவாக ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அனைத்து பகுதிகளிலும் பேருந்து போக்குவரத்தில் பொதுமக்கள் அதிக சிரமங்களை சந்தித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் வகையில் இந்த ஷேர் ஆட்டோக்கள் அதிக அளவில் உறையூர் தில்லைநகர் எடமலைப்பட்டி புதூர் கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு இயக்கப்படும் ஷேர் ஆட்டோகளில் அதிக அளவில் பயணிகளை ஏற்றுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

    இதனை சீர் செய்யும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பயணிகளை அதிக அளவில் ஏற்றுவதை தவிர்த்து விபத்துகளை குறைத்து வந்தனர்.

    மேலும் கட்டிட தொழிலாளர்கள் அதிக அளவில் ஷேர் ஆட்டோவை பயன்படுத்தும் போது படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.

    இதனால் மீண்டும் விபத்துகள் ஏற்பட்டு ஷேர் ஆட்டோ களில் பயணம் செய்பவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்படுவதற்கு முன்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து ஷேர் ஆட்டோக்களின் பயணம் செய்யும் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×