search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "share autos"

    • திருச்சியில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆபத்தான பயணம் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
    • மேலும் கட்டிட தொழிலாளர்கள் அதிக அளவில் ஷேர் ஆட்டோவை பயன்படுத்தும் போது படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்

    திருச்சி:

    திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்களின் போக்குவரத்திற்கு ஏதுவாக ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அனைத்து பகுதிகளிலும் பேருந்து போக்குவரத்தில் பொதுமக்கள் அதிக சிரமங்களை சந்தித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் வகையில் இந்த ஷேர் ஆட்டோக்கள் அதிக அளவில் உறையூர் தில்லைநகர் எடமலைப்பட்டி புதூர் கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு இயக்கப்படும் ஷேர் ஆட்டோகளில் அதிக அளவில் பயணிகளை ஏற்றுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

    இதனை சீர் செய்யும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பயணிகளை அதிக அளவில் ஏற்றுவதை தவிர்த்து விபத்துகளை குறைத்து வந்தனர்.

    மேலும் கட்டிட தொழிலாளர்கள் அதிக அளவில் ஷேர் ஆட்டோவை பயன்படுத்தும் போது படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.

    இதனால் மீண்டும் விபத்துகள் ஏற்பட்டு ஷேர் ஆட்டோ களில் பயணம் செய்பவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்படுவதற்கு முன்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து ஷேர் ஆட்டோக்களின் பயணம் செய்யும் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பெரம்பலூரில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் வடக்குமாதவி சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷேர் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி சென்றபோது எதிரே வந்த டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்தனர். இதேபோல சிலமாதங்களுக்கு முன்பு வடக்குமாதவி சாலையில் அம்மன் நகர் அருகே ஏற்பட்ட மற்றொரு விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த ஒருவர் பலியானார். மேலும் சில விபத்துக்களில் ஷேர் ஆட்டோ பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

    ஷேர் ஆட்டோக்களை உரிமம் பெறாதவர்கள் இயக்குவதை கண்டித்தும், ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்பவர்களின் வாகன உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தியும், வடக்குமாதவி சாலையில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக மக்களை ஏற்றுவதை தடுத்து போக்குவரத்தை எளிதாக்க கூடுதலாக மினி பஸ்களை இயக்க வலியுறுத்தியும் பெரம்பலூரில் எளம்பலூர்-சமத்துவபுரம் சாலையில் வடக்குமாதவி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இன்னும் ஒருவாரத்திற்குள் பெரம்பலூரில் ஷேர் ஆட்டோக்களை விதிமுறைகளை மீறி இயக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். போலீசார் குறிப்பிட்ட நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வடக்குமாதவி, ஏரிக்கரை குடியிருப்பு பகுதி, சமத்துவபுரம் ஆகிய பகுதி பொதுமக்களை ஒன்று திரட்டி பெரம்பலூர் புறவழிச்சாலையில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். மறியலில் எளம்பலூர்-சமத்துவபுரம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ×