search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிக்கடி"

    • நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா?
    • நாகர்கோவில் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் உள்ள மழை நீர் வடிகால் அவ்வப்போது ஏற்படும் அடைப்புகளால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கடும் சிரமத்தை கொடுத்து வருகின்றன.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் உள்ள மழை நீர் வடிகால் அவ்வப்போது ஏற்படும் அடைப்புகளால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கடும் சிரமத்தை கொடுத்து வருகின்றன.

    சிதம்பரம் நகர் ஜங்ஷன் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள கழிவுகள் பீ. டபுள் .யு .டி. ரோடு வழியாக செட்டிகுளம் சிக்னலை கடந்து அங்குள்ள பெரிய வாய்க்காலில் சென்று கலக்கிறது.

    இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மழை நீர் வடிகால்கள் ,கழிவுகள் மற்றும் சகதிமணல்களால் அடிக்கடி நிரம்பி விடுகின்றன. இதனால் பல இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீர் தடையின்றி செல்ல முடியாமல் உடைப்புகள் வழியாக வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது.

    அதன் பிறகு மாநகராட்சி ஊழியர்கள் வந்து மழை நீர் வடிகால்கள் மேல் உள்ள ஸ்லாப்புகளை உடைத்து, அகற்றி அடைப்பை சரி செய்து முடித்த பிறகு தான் மீண்டும் கழிவுநீர் செல்லும் நிலை ஏற்படுகிறது.

    இந்த நிலை அடிக்கடி ஏற்படுவதால் ஸ்லாப்புகள் அடிக்கடி மாற்றபட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மாநகராட்சி சீரமைத்தாலும் இந்த செலவை வசதிகள் கருதி அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தொழில திபர்கள் பொதுமக்கள் ஆகியோரே கூடுதலாக செய்யும் நிலை ஏற்படுகிறது. இதற்கு ஆண்டுக்கு பல ஆயிரம் வரை செலவு ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

    ஆண்டுக்கு 2முறை இது போன்ற செலவுகளை வியாபாரிகள் பொதுமக்கள் சந்திக்க வேண் டியதாககூறு கிறார்கள்.பாதாள சாக்கடை பணி யின் போது உண்டான மணல் சகதிகழிவுகளே மழை நீர் வடிகால்களில்தேங்கி இது போன்ற அடைப்பு களை அடிக்கடி ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அடிக்கடி ஸ்லாப்புகளைஉடைத்து வியாபாரிகள் மற்றும் மாநகராட்சிக்கு செலவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மழை நீர் வடிகால்களை ஆழமாக தூர்வாரி மீண்டும், மீண்டும் அடைப்புகள் ஏற்படா வண்ணம் தடுத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வீண்செலவு ,சுகாதார சீர்கேடு உள்ளிட்ட சிரமங்களை தவிர்க்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி தொழிலதிபர்கள், வியாபா ரிகள் பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×