search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்காள் தம்பி தற்கொலை"

    உடுமலை அருகே அக்காள்-தம்பி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூலாங்கிணறு பகுதியை சேர்ந்தவர் ஜானகி (75). இவரது தம்பி நாகராஜன் (65). இவருக்கு திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர்.

    நாகராஜன் தனது அக்காள் ஜானகி மீது அதிக பாசம் வைத்து இருந்தார். இந்த நிலையில் ஜானகி உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதனை தனது தம்பியிடம் தெரிவித்த போது அவரும் தற்கொலைக்கு ஒத்துக்கொண்டார். நாகராஜன் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியே சென்று இருந்தனர்.

    இந்த சமயத்தில் ஜானகியும், அவரது தம்பி நாகராஜனும் வி‌ஷம் குடித்தனர். இதில் இருவரும் மயங்கி விழுந்து இறந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து உடுமலை டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×