search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகல்விளக்குகள்"

    • ஒட்டன்சத்திரம் பகுதியில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • குறைந்த லாபம் கிடைத்தபோதும் இதனை சில தொழிலாளர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். தங்களுக்கு அரசு உதவவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    கார்த்திைக மாதத்தில் வரும் கார்த்திகை திருகார்த்திகை என கொண்டாடப்படுகிறது. அப்போது வீடுகளில் பல்வேறு அகல்விளக்குகள் ஏற்றி பொதுமக்கள் வழிபாடுவார்கள். காலமாற்றத்தால் மெழுகுவர்த்தி மற்றும் ரெடிமேடு விளக்குகளை பயன்படுத்த தொடங்கினர்.

    இருந்தபோதும் சில கிராமப்பகுதிகளில் தற்போதும் அகல்விளக்குகளை வீடு முழுவதும் ஏற்றி பொதுமக்கள் திருகார்த்திகையை கொண்டாடி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கார்த்திகை மாதத்தில் கார்மேக கூட்டங்கள் மழைபொழியும். காந்தல் மலர்கள் மலரும். இந்த மாதத்தில் கொண்டாடப்படும் திருக்கார்த்திகைக்கு தனிச்சிறப்பு உள்ளது. இந்தியா மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஒட்டன்சத்திரம் அருகே சாமியார்புதூர், சீரங்கவுண்டன்புதூர், நால்ரோடு, ஆயக்குடி ஆகிய பகுதிகளில் தொழிலாளர்கள் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 1000 விளக்குகள் ரூ.700-க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இங்கிருந்து மூலனூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை,தாராபுரம், நத்தம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தினசரி 1000-க்கும் மேற்பட்ட விளக்குகளை தயாரித்து வருகின்றனர். தற்போது ரெடிமேடு மற்றும் மெழுகுவிளக்குகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அகல்விளக்குகள் விற்பனை மந்தமாகவே உள்ளது. குறைந்த லாபம் கிடைத்தபோதும் இதனை சில தொழிலாளர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். தங்களுக்கு அரசு உதவவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×