search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workers investigation"

    திருப்பதியில் கருட சேவையன்று 16 ஆயிரம் லட்டுகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளதையடுத்து ஊழியர்கள் 8 பேரிடம் விஜிலென்ஸ் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tirupati #TirupatiLaddu
    திருமலை:

    திருப்பதியில் லட்டு விற்பனை கவுன்டர்களில் தேவஸ்தான பணியாளர்கள், ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள், வங்கிகளின் ஏற்பாட்டின் கீழ் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    திருப்பதியில் கடந்த 10-ந்தேதி தொடங்கி நவராத்தி பிரம்மோற்சவம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட வாகன சேவையன்று சாமி தரிசனத்திற்காக 4 லட்சம் பக்தர்கள் திருப்பதி மலையில் திரண்டனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தனர்.

    இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களுக்கு சாமி தரிசனத்துக்கான வரிசையில் லட்டு வாங்குவதற்கான டோக்கன்கள் வாங்கப்படும். சாமி கும்பிட்டு வெளியில் வந்தபின் லட்டு விற்பனை கவுன்டர்களில் டோக்கன்களை கொடுத்து பக்தர்கள் லட்டுக்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    பக்தர்களிடமிருந்து பெறப்படும் டோக்கன்களை வாங்கும் ஊழியர்கள் அதில் அச்சிடப்பட்டிருக்கும் பார் கோடுகளை ஸ்கேன் செய்து சரி பார்த்த பின்னர் லட்டுகளை வழங்குவார்கள். போலி டோக்கன்களை கொடுத்து யாரும் முறைகேடுகளில் ஈடுபடாமல் தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கருட சேவை அன்று பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. எனவே டோக்கன்களை ஸ்கேஸ் செய்யும் போது சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் கண்டு கொள்ள வேண்டாம்.

    பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதால் பக்தர்களுக்கு உதவும் வகையில் செயல்படுவார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்த உத்தரவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஊழியர்கள் அன்று ஒரே நாளில் மட்டும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லட்டுகளை முறைகேடாக விநியோகம் செய்துள்ளனர்.

    கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுகளை கன்வேயர் பெல்ட் மூலம் கவுன்டர்களுக்கு அனுப்புவது வழக்கம். ஒவ்வொரு டிரேயிலும் 51 லட்டுகள் இருக்கும்.

    கருட சேவை நாளில் தேவஸ்தான அதிகாரிகள், விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆகியோர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது ஆகியவற்றில் மூழ்கி இருந்தனர்.

    இந்த சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஒப்பந்த ஊழியர்கள், அன்று ஒரே நாளில் மட்டும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லட்டுகளை முறைகேடாக விநியோகித்துள்ளனர்.

    கருடசேவை முடிந்த பின் விற்பனை செய்யப்பட்ட லட்டுகளின் எண்ணிக்கைக்கும் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட டோக்கன்களின் எண்ணிக்கைக்கும் இடையே வேறுபாடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில விஜிலென்ஸ் துறையினர் ஒப்பந்த ஊழியர்கள் 8 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #Tirupati #TirupatiLaddu

    ×